1.தமிழ் சமூகம் அதன் பண்பாடு மற்றும் பாரம்பரியம்
பண்பாடு (ம) நாகரிகம் விளக்குக.
நாகரிகம்
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயக்கண்டும்
நாகரிகம் வேண்டு பவர்.
பண்பாடு:
- டி.கே. சிதம்பரனார் கூற்று
உழவன் பயிர்செழிக்க நிலத்தைப் பண்படுத்துதல் போல, மனித வாழ்வு செழிக்க உயர்த்த எண்ணங்களால் மனதைச் செம்மைப்படுத்த வேண்டும்.
- தொல் காப்பியம்
- உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றோ”
- உயர்ந்தோர் – பண்பாடு உடையவர்கள்
- திருவள்ளூர் :
- “பண்புடையார்ப் பண்டுண்டு உலகம்”
- மனிதனை மேம்படுத்துகின்ற அன்பு, ஈகை, புகழ், மனிதநேயம் போன்ற பண்புகளை மக்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
- கலித்தொகை
- “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்”
- பண்புடையவர்களால் மட்டுமே இவ்வுலகம் இயங்குகிறது.
- பண்பாடு – பண்பாடு எனும் சொல்லிலிருந்து உருவாக்கம் பொருள் -சீர்படுத்துதல், செம்மைப்படுத்துதல்
- பண்பாடு நாகரிகம் வேறுபடுத்துக.
வ.எண் | பண்பாடு | நாகரிகம் |
1 | மாந்தனது அகவுணர்வு வளர்ச்சி (ம) சீர்மை | மாந்தனது புறத்தோற்ற வளர்ச்சி (ம) செம்மை |
2 | அறிவு (ம) உள்ளுணர்வால் உள்ளத்தைப் பண்படுத்துதல் | புறத்தோற்றப் பொலிவுகளை வளர்த்தல் |
3 | எடுத்துக்காட்டு: அண்புடையவன் ஈகை உடையவன் அருளுடையவன் | நாட்டியம் கலைக்கூடங்கள் ஓவியம் |
4 | நாகரிக வளர்ச்சிக்கு பண்பாடு துணைபுரியும் | பண்பாடு வளர்ச்சிக்கு நாகரிகம் துணை புரியும் |
5 | ஒரு குழுவின் வாழ்க்கை முறை பிரதிபலிப்பு | பரந்துபட்ட ஒரு சமுதாயத்தின் மேம்பட்ட வாழ்க்கை முறை |
6 | வளர்ச்சியை அளவிட முடியாது | வளர்ச்சியை அளவிட முடியும் |
7 | மாற்றம் மிகவும் மெதுவாக நடைபெறும் | விரைந்து மாறக் கூடியது |
8 | பண்பாடு சில நேரங்களில் தேக்கமடையும் | நூகரிகம் தேக்கம் அடையாது |
- முச்சங்கங்கள் பற்றி விவரிக்க.
முச்சங்கங்கள்:
- பாண்டிய மன்னர்கள் தமிழை வளர்ப்பதற்காகப் புலவர் பலரையும் ஒன்றிணைத்து தமிழ்ச்சங்கங்களை நிறுவினர்.
- இவை கால அடிப்படையில் 3 வகைப்படுகிறது.
- பாண்டியரைப் போலவே சேர,சோழ, சிற்றரசர்களும் ஆதரவு தந்தனர்.
- ஆதாரங்கள்: நக்கீரரின் – இறையனார் களவியல் உரை, சங்க இலக்கியங்கள்
- சங்க இலக்கியத்தில் சங்கம் என்ற சொல் எங்கும் இடம்பெறவில்லை
வ.எண் | முதற்சங்கம் | இடைச்சங்கம் | கடைச்சங்கம் |
1 | இடம்: தென்மதுரை | கபடாபுரம் | தற்போதைய மதுரை |
2 | ஆற்றங்கரை: பஃறுளியாறு | காவிரி | ஐவகை |
3 | இலக்கண நூல்கள் அகத்தியம் | அகத்தியம் தொல்காப்பியம் | அகத்தியம் தொல்காப்பியம் |
4 | ஆதரித்தவர்கள் காய்ச்சின வழுதி முதல் கடுங்கோன் வரை | வேண்டர் செழியன் முதல் முடத்திருமாறன் வரை | முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரை |
5 | நூல்கள் பரிபாடல் முதுநாரை முதுகுருகு | கலித்தொகை மாபுராணம் பூதபுராணம் | நற்றிணை குறுந்தொகை புறநானூறு |
6 | நிலவிய ஆண்டு 4440 ஆண்டுகள் | 3700 ஆண்டுகள் | 1850 ஆண்டுகள் |
7 | பண்டிய மன்னர்கள் 89 பேர் | 59 பேர் | 49 பேர் |
8 | சங்க உறுப்பினர்கள் 549 பேர் | 59 பேர் | 49 பேர் |
- பண்டையத் தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்பினை இலக்கியச் சான்றுகளின் வழி விளக்குக.
இலக்கியச் சான்றுகள்
- தொல்காப்பியம்
பொருளதிகாரம் பழந்தமிழரின் அ, புறவாழ்க்கை முறைகளைப் பற்றிக் கூறுகிறது.
- சங்க இலக்கியங்கள்
- அக வாழ்க்கையை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை என அன்பின் ஐந்திணையாகப் பகுத்துள்ளன.
- முதற்பொருள் – நிலம் (ம) பொழுது
கருப்பொருள் – தெய்வம், வழிபாட்டு முறைகள், வாழ்க்கை முறைகள், விளையும் பொருள்கள்
- “யாதும் ஊரே யாவரும் கேளிர்”
– கணியன் பூங்குன்றனார் கூறியுள்ளார்.
- பதிற்றுப்பத்து
சேர மன்னர்களின் வணிகமுறை, ஆட்சிச்சிறப்பு, போர்த்திறம், கொடைத்திறம் முதலானவற்றைப் பற்றி விரிவாக விளக்குகிறது.
- பத்துப்பாட்டு – ஆற்றுப்படை நூல்கள்
இதில் உள்ள 5 ஆற்றுப்படை நூல்கள், தம்மைப் போன்று வறுமையில் வாடும் பிறரும் வளம் பெற்று வாழ்வதற்கான வழிமுறைகளைக் கூறுகின்ற பெருமனம் படைத்தவர்களாகப் புலவர்கள் திகழ்ந்துள்ளதைக் கூறுகிறது.
- பத்துப்பாட்டில் – ஆற்றுப்படை அல்லாத நூல்கள்
- குறிஞ்சிப்பாட்டு – நிலவளம் பற்றி பேசுகிறது.
- முல்லைப்பாட்டு – காதலின் சிறப்பைக் கூறுகிறது
- மதுரைக்காஞ்சி – பாண்டியன் நெடுஞ்செழியனின் சிறப்பைக் கூறுகிறது. இதில் நிலையாமை குறித்த கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
- நெடுநல்வடை – கார்கால நிகழ்ச்சிகளை படம் பிடித்துக் காட்டுகிறது.
- பட்டினப்பாலை – “முட்டாச் சிறப்பின் பட்டினம்” என்ற சொற்றொடர் சோழநாட்டின் தரை (ம) கடல்வழி வணிக வளத்தை குறிப்பிடுகிறது.
- சிலப்பதிகாரம்
- தமிழர் ஆட்சிமுறை
- ஆடல், பாடல், கலைவளம்
- புகார், மதுரை, வஞ்சி ஆகிய தலைநகரங்களின் சிறப்பு
- வணிகச்சிறப்பு
- சமய நம்பிக்கை (ம) வழிபாட்டு முறைகள்
- தனிமனித ஒழுக்கம் (ம) நீதி வழங்கும் முறைமை
- மணிமேகலை
- சமய அறக் கருத்துக்கள் (ம) வாழ்வியல் நெறிகளை எடுத்துதரைக்கிறது.
- குற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்வதன் மூலம்
- குற்றங்களை தடுக்க முடியும்
- பசியைப் போக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது.
- தமிழகப் பண்பாட்டினை அறிய வெளிநாட்டவரின் குறிப்புகள் எங்ஙனம் உதவுகின்றன என்பதை விளக்குக.
வெளிநாட்டினரின் குறிப்புகள்
தமிழகத்தில் வணிகம் செய்ய வந்த வெளிநாட்டவரான யவனர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், புனிதப்பயணம் மேற்கொண்டவர்கள் போன்றவர்களின் குறிப்புகளில், தமிழகம் பிறநாடுகளுடன் கொண்டிருந்த தொடர்பினை அறிய முடிகிறது.
- எரித்திரியக் கடலின் பெரிபுளூஸ்
இந்நூலில், கிரேக்க மக்கள் நாகரிக சமூகத்தில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே, எகிப்தும் பண்டைய இந்தியாவும் நெடுங்காலமாக வணிகத் தொடர்பு கொண்டிருந்தன எனக் கூறப்பட்டுள்ளது.
- முக்கிய நூல்கள்
- ஸ்டிராபோ எழுதிய பூகோளநூல்
- பிளினி எழுதிய உயிரியல் நூல்
- தாலமி எழுதிய பூகோளநூல் ஆகியவை பண்டைய தமிழகத்தின் கடல் வணிகம் பற்றிக் குறிப்பிடுகிறது.
- சேரநாட்டுத் துறைமுகங்கள் அனைத்தும் கண்ணனூருக்கும் கொச்சிக்கும் இடையில் அமைந்திருந்தன.
- அரேபியாவிலிருந்தும், கிரேக்கத்திலிருந்தும் வணிகப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த எண்ணற்ற நாவாய்கள் முசிறியில் கிடந்தன.
- கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்
கி.மு. 5 ம் நூற்றாண்டு முதல் கிரேக்கர்கள் தமிழகத்துடன் வணிகத் தொடர்பு கொண்டு இருந்ததை, தமிழ் சொற்கள் கிரேக்க மொழியில் இடம்ட பெற்றிருப்பது மூலம் அறியலாம்.
- சாலமன் மன்னனுக்கு அளிக்கப்பெற்ற பொருட்கள்
- துகிம் – மயில்தோகை
- ஆல்மக் – அகில் மரங்கள்
சாலமன் மன்னனுக்கு அளிக்கப்பெற்ற பொருட்கள் அனைத்தும் தமிழ்ப் பெயர்களின் சிதைவுகளே.
- ஏற்றுமதிப் பொருட்கள்
- ஐரோப்பிய நாடுகளுக்குப் பலவகையான நறுமணப் பொருட்கள் ஏற்றுமதியாயின.
- புலி, சிறுத்தை, யானை, குரங்கு, மயில், கிளி, வேட்டை நாய்கள் என ஏற்றுமதி ஆகின.
- மஸ்லின்துணி, ஏலக்காய், இலவங்கம் ஏற்றுமதி
- ரோமர்களின் குறிப்புகள்
சேர நாட்டு துறைமுகங்கள் | ரோமர்களின் குறிப்புகள் |
தொண்டி | திண்டிஸ் |
முசிறி | முஸிரிஸ் |
- வெளிநாட்டவரின் துறைமுக குறிப்புகள்
கீழைக்கடற்கரைத் துறைமுகங்கள் | நூல்குறிப்புகள் |
கொற்கை | கொல்சாய் |
நாகப்பட்டினம் | நுிகாமா |
- ஹிப்பாகிரேட்டஸின் குறிப்பு
- 5 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மருத்துவர்
- இவர் ‘மிளகை’ இந்திய மருந்து என்றே குறிப்பிட்டுள்ளார்.
- தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடி கல்வெட்டுகளும் பட்டயங்களும் என்பதை நிறுவுக.
கல்வெட்டுகள்
- பண்டைய தமிழகத்தின் கோயில்களில் உள்ள கற்சுவர்கள், கோயில் மண்டபத்துக் கற்தூண்கள் போன்வற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை எழுத்திருக்களாகப் பொறிந்தனர்.
- பெரும்பாலும் மன்னர்களின் ஆணைகள், அவர்களின் சாதனைகள் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன.
கல்வெட்டுகள் மூலம் அறியப்படும் செய்திகள்
- திருப்பரங்குன்றம், நாகமலை, ஆனைமலை, கீழக்குயில்குடி கல்வெட்டுகள்
சங்ககால செய்திகளை குறிப்பிடுகின்றன.
- பல்லவர்கால கல்வெட்டுகள்
- இக்கால கல்வெட்டுகள் குகைகள், இரதங்கள், கோயில்கள், கற்பாறைகள், தூண்கள் ஆகியவற்றில் காணப்படுகின்றன.
- மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, திருச்சி, பல்லாவரம், மாமல்லபுரம், தளவானூர் கல்வெட்டுகள் முக்கியமானவை.
- காஞ்சி கோயில் கல்வெட்டுகள் மூலம், பல்லவர்கால வரலாற்றை அறிய முடிகிறது.
- பராந்தக சோழனின் உத்திரமேரூர் கல்வெட்டுகள்
- சோழர்களின் கிராம ஆட்சிமுறையைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
- இக்கல்வெட்டில் கிராம உறுப்பினர்களின் தகுதிகள் தேர்ந்தெடுக்கப்படும் முறை குறிப்பிடப்பட்டுள்ளன.
- தஞ்சை, திருவொற்றியூர், மேலப்பழுவூர், சிதம்பரம், திருவாரூர், மதுரை, கன்னியாகுமரி கல்வெட்டுகள்
மக்களின் பண்பாடு, அரசியல், வாழ்க்கைமுறை, நீதி, சமூக உறவு, பொருளாதார நிலையை எடுத்துரைக்கின்றன.
- பிறகல்வெட்டுகள்:
- தமிழ் – பிராமி கல்வெட்டுகள் – சமணத்துறவிகளின் இருப்பிடம்
- பூலாங்குறிச்சி – களப்பிரர்கள் பற்றிய குறிப்பு
- புகளூர் கல்வெட்டு – சேரல் இரும்பொறை பற்றிய குறிப்புகள்
- ஜம்பை கல்வெட்டு – அதியமான் ஃ காணப்படுகின்றன.
- தமிழ் – பிராமிகல்வெட்டுகள்
மாங்குளம், புகலூர், கம்பை, அரச்சனூர், மதுரை, முத்துப்பட்டி, கொங்கர் புளியங்குளம்
பட்டயங்கள்:
- பொன், செம்பு ஆகிய உலோகத்தடுக்களின் மீது எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருந்தன.
- இவை காலத்தையும் ஆட்சி முறையையும் அறிய உதவுகின்றன.
- இதில் அரசனின் பெயர், அவனது காலம், பட்டயம் அளிக்கப்படும் நோக்கம் முதலியன இருந்தன.
- இவை பிராகிருதம், வடமொழி (ம) தமிழினும் காணப்படுகின்றன.
உரம் – பல்லவர்கள்
காசக்குடி பல்லவ சிம்ம விக்ஷ்ணு (சேர, சோழ, பாண்டிய களப்பிரர் மீதான வெற்றி)
பாண்டியர் காலப் பட்டங்கள்
- வேள்விக்குடி பட்டயம் – முதுகுடுமிப் பெருவழுதி பற்றிய செய்திகள்
- சின்னமனூர்ச் செப்பேடுகள் – தலையானங்கானத்து
சோழர்காலப் பட்டயங்கள்:
- திருவாலங்காட்டுச் செப்பேடுகள் – முதலாம் ராஜேந்திரன்
- கரந்தைச் செப்பேடுகள் – முதலாம் ராஜேந்திரன்
- தமிழர்களின் விருந்தோம்பல் பண்பினை விளக்குக.
தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு
விருந்தே தானும் புதுவது புனைந்த
யாப்பின் மேற்றே’ – தொல்காப்பியம்
- தொல்காப்பியம் – பொருளாதிகாரம்
- இதில் விருந்து என்பது புதியது எனப்படுகிறது.
- வீடு தேடிவருமட் அனைவரையும் உபசரித்தார்
- திருக்குறள்
விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா
மருந்து எனினும் வேண்டற்பாற் றன்று
பசியென வந்தவர்களை வரவேற்று, இன்முகத்தோடு
உணவளித்த பெருமை, நம் தமிழர்களையே சாரும்
- இளங்கோவடிகள்
“தொல்லோர் சிறப்பின்” என கூறுவதிலிருந்து தமிழரின் தொன்மையான பழக்கம் விருந்தோம்பல் என்பதை அறியலாம்.
- சங்க இலக்கியங்கள்
- விருந்தோம்பும் பண்பு கணவன் – மனைவியின் தலையாய கடமை
- உணவின்றிப் பயணம் மேற்கொண்டு வருபவர்களுக்கு வழியினுள்ள வீடுகளில் உணவளிப்பர்.
- நற்றிணை
“அல்லல் ஆயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்”
இரவில் வாயில் கதவை அடைக்கும்முன் விருந்தினர் யாரேனும் உள்ளனரா என பார்ப்பர்
- ஒளவையார் பாடல குறிப்பிடுவது
ஒரு நாள் சென்றாலும், பல நாள் சென்றாலும் முதல்நாள் போன்றே இன்முகத்துடன் விருந்தோம்புவர்.
- மடைநூல்
- பழந்தமிழ் இலக்கியத்தில் உணவு சமைக்கும் முறைகளை குறிப்பிடுகிறது.
- உணவு பற்றி செய்திகள் சிறுபாணாற்றுப்படை, பெருங்கதை, மணிமேகலையில் இடம் பெற்றுள்ளன.
- பிறசெய்திகள்
- இரவில் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு நெய் கலந்த இறைச்சியைச் சமைத்து கொடுப்பது வழக்கம்
- பசி என்று வந்தவர்களை வெளியே நிற்க வைத்துவிட்டு தாம் மட்டும் உணவு உண்ண மாட்டார்கள்
- விருந்தினர் மனம் மகிழும் படி விண்மீன்கள் போன்ற ஒளிவீசும் கிண்ணங்களில் பலவகையான உணவுகளை படைப்பர்
- வீட்டிற்கு வந்தவர்களுக்கு உணவளித்த பிறகே தாம் உண்டனர்.
- உணவை மூங்கில் குழாயில் இட்டு மாட்டின் கழுத்தில் கட்டுவர்.
- சங்ககால வரலாற்றை அறிந்துகொள்ள, புகளூர்க் கல்வெட்டு எவ்வகையில் துணைபுரிகிறது – விளக்குக.
ஐராவிதம் மகாதேவன்
- இவர் இந்திய ஆட்சிப் பணியாளர்
- தொல்லியல் (ம) எழுத்தியலில் இருந்த ஆர்வத்தால் விருப்ப ஒய்வு பெற்றார்.
- கல்வெட்டு ஆய்வில் 30 ஆண்டுகள் ஈடுபட்டார்.
- சிந்துவெளி எழுத்துருவை ஆய்ந்து திராவிட எழுத்து என்றார்.
- பதிற்றுப் பத்தில் இடம்பெற்ற சேர அரசர்களின் பெயர்கள் புகளூர் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளதை கண்டுபிடித்தார்.
புகளூர் கல்வெட்டு:
- கரூரை அடுத்த புகளூரில் உள்ளது
- ஆறு நாட்டான் குன்றின் மீது சேரல் இரும்பொறை மன்னர்கள் பற்றி பொறிக்கப்பட்டுள்ளது.
- இது தமிழ் – பிராமிக் கல்வெட்டு என முதலில் கருதப்பட்டது.
- இது சங்ககாலத் தமிழ் மன்னர்களை பற்றிய புறச்சான்றாக உள்ளது.
- இந்திய அரசின் தொல்பொருள் துறையினர் வெளியிட்ட, தென்னிந்தியக் கல்வெட்டுகளைப் பற்றிய அறிக்கையில் (1927-28) முதன் முதலில் புகளூர் கல்வெட்டு பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.
- கல்வெட்டில் நான்கு வரிகள் இடம் பெற்றிருந்தன.
- அதில் ஆகன் என்ற சொல் காணப்படுகிறது.
- பெரும்பாலும் தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் சுருக்கமாக ஒரே வரியில் 3 (அ) 4 சொற்களுடன் பொறிக்கப்பட்டு இருக்கும்
- இக்கல்வெட்டில் பதிற்றுப்பத்தின் 7வது, 8வது, 9வது, பாட்டுடைத் தலைவர்கள் பற்றிய குறிப்பு உள்ளது.
- இக்கல்வெட்டுகளில் தமிழுக்கே உரிய எழுத்துக்களான ழ, ள, ற, ன இடம் பெற்றுள்ளன.
- இவை பின் பிராகிருத மொழியில் எழுதப்பட்டவை அல்ல தமிழில் எழுதப்பட்டதை அறிய முடிந்தது.
- இவை கி.பி. 2ம் நூற்றாண்டைச் சார்ந்தவை
கல்வெட்டு வாசகம்
“…. அம்மன்னன் யாற்றூர் செங்காயபன் உறைய்
கோ ஆதன் சொல்லிரும் பொறை மகன்
பெருங் கடுங்கோன் மகன் (இ) ளங்
கடுங்கோ (இளங்கோ ஆக அறுத்த கல்”
கல்வெட்டிலிருந்து அறியப்படுவன
- யாற்றூர் என்னும் இடத்தைச் சேர்ந்த சமணத் துறவியான செங்காயபன் வசிக்கும் இடம் இது
- சங்க நூல்களில் மட்டுமே இதுவரை காணப்பட்ட பண்டைய தமிழ் மன்னர்களின் பெயர்கள், முதன்முதலில் கல்வெட்டில் இடம்பெற்றிருந்தது.
- பெருங்கடுங்கோன், இளங்கடுங்கோன், இளங்கோ போன்ற பெயர்கள் இடம்பெற்றன.
- இது கருவூரிலிருந்து ஆட்சி செய்த, சேரல் இரும்பொறை பொறித்தது.
- தமிழர்கிளன் தோற்றம் பற்றி கருது கோள்கள்
- குமரி கண்டத்தில் வாழந்தவர்கள்
- தென் இந்தியாவின் பழங்குடிகள்
- ஆதியில் ஆப்பிரிக்காவில் இருந்து, அரேபிய கடல் வழியாகத் தென்னிந்தியா வந்தோரின் வழித்தோன்றல்கள்
- மத்திய ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென்னிந்தியா வந்தவர்கள்
தமிழரின் தோற்றம் பற்றிய கொள்கைகள்
- குமரிகண்ட கொள்கை
- சிலப்பதிகாரம்
‘பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்காடும் கொடுங்கடல் கொள்ள’
என்று லெமூரியாக் கண்ம் குறித்து கூறுகிறது.
- இறையனார் களவியல் வரை
முச்சங்கங்கள் பற்றிய செய்திகளைத் தருகிறது இதில் முதல் 2 சங்கங்கள் கடற்கோளால் அழிந்தது.
தென்னிந்திய இரும்புகால கொள்கை
எமன்டால்ப் என்பவர் கூற்று
- திராவிடர்கள் – பழைய மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து குடியேற்றம் (ம) இரும்பை அறிமுகம் செய்தனர்.
- ஆரியர்கள் – புதிய தரைக்கடல் பகுதியிலிருந்து குடியேறியவர்கள்
பாலகிருக்ஷ்ணன்
‘ஊர் பேர் ஆய்வுகள்’ நூலில் மேற்கிந்திய நாடுகளில் தொண்டி, முசிறி போன்ற ஊர்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கால்டுவெல்:
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலில், பலுசிஸ்தானில் உள்ள பிராகு மொழியின் எண்கள் தமிழ் எண்களை ஒத்துள்ளது.
- தமிழர்களின் பரவல் பற்றி விவரி.
- உலகின் 154 நாடுகளில் தமிழர்கள் இனம் உள்ளது.
- அந்நாடுகளில் 7 முதல் 10 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
- இருபது நாடுகளில் இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர் வாழ்கின்றனர்.
- கிரேக்கம், ரோம், எகிப்து, பாலஸ்தீனம் போன்ற பண்டைய நாகரிக நாடுகளுடன் வணிகத்தில் தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- மேற்கு ஆசிய நாடுகளுக்க மிளகு, இஞ்சி, எலக்காய் ஏற்றுமதி செய்யப்பட்டன.
- சுமேரியர்களுடன் கிமு 4 நூற்றாண்டிற்கும் முன்பே வர்த்தக உறவு இருந்துள்ளது.
- அரிக்கமேடு அகழாய்வு ரோம் உடனான வர்த்தகத்தை உறுதிப்படுத்துகிறது
- தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேக்கு மரத்தால் பரசீக வளைகுடாவில கப்பல்கள் செய்யப்பட்டன.
- கி.மு. ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து பொருட்கள் சீனாவில் விற்கப்பட்டன.
- பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி, பெரும்பாணாற்றுப்படை நூல்கள் அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குதிரை வணிகத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
- உலகளாவிய தமிழர்களைப் பற்றி விரிவாக எழுதுக (ழச) உலகளாவிய தமிழரின் மொழி (ம) பண்பாட்டு நிலையை விவரி.
தமிழினப் பரவல்
- ஏறத்தாழ உலகின் 154 நாடுகளில் தமிழினம் பரவியுள்ளது.
- இதில் 7 முதல் 70 லட்சம் வரை தமிழர்கள் வசிக்கின்றனர்.
- அவற்றுள் 20 நாடுகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்
தமிழர்கள் புலம்பெயரக் காரணங்கள்:
- வணிகம் (ம) வேலைவாய்ப்பு:
“திரை கடலோடியும் திரவியம் தேடு” – ஒளவையார் கூற்று
- ஆங்கிலேயர் (ம) பிரெஞ்சுக் காரர்கள் தமிழர் சிலரை அடிமைக் கூலிகளாக்கி, தம் ஆளுமைக்கு உட்பட்ட நாடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.
- பஞ்சம் (ம) அன்னிய படையெடுப்பு
பண்பாட்டு நிலை
- தமிழர் சிங்கப்பூர், மலேசியா, பினாங்குத் தீவு ஆகிய நாடுகளில் கோவில்கள் கட்டி ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடத்தி வருகின்றனர்.
- ரீயூனியன் தீவில் வாழும் பெரும்பான்மையானோர் தமிழர்கள் இவர்கள் பிரஞ்சுக்காரர்களால் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலிருந:து ஒப்பந்தக் கூலிகளாக குடியமர்த்தப்பட்டனர்.
- ரீயூனியன் தீவில் காவடி எடுத்தல், தேரிழுத்தல் இன்றும் நடைபெறுகிறது
மொழிநிலை:
- இலங்கைத் தமிழரில் 95மூ பேர் தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழிலேயே கல்வி பயில்கின்றனர்.
- தமிழ் ஆட்சி முறை சிங்கப்பூர், மொரிசியசு, மலேசியா, பிஜித்தீவுகள், தென் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் நாடுகளில் தமிழ் ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது.
- 24 மணி நேரமும் ஊடகங்களில் தமிழைக் கேட்கவும். காணவும் தமிழர்கள் அந்தந்த நாட்டு அரசுகளிடம் அனுமதி பெற்றுள்னர்.
தமிழுக்கு பங்காற்றிய பேராசிரியர்கள்
- அமெரிக்க நாட்டுப் பேராசிரியர்கள் வி.எஸ். ராஜன்
- எல்.ஹார்ட்
- கௌசல்யா ஹார்ட்
- லிண்ட் ஹோம்
- இந்திரா, நார்மன், ஹால்சிப்மேன்
- குளோத்தி, ஜேம்ஸ் பிராங்கா
- ஏ.கே. ராமானுஜம்
தமிழ் ஆட்சி மொழி
- இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது.
- இந்நாடுகளில் இசை, நாட்டியம். நாடகம் முதலியவற்றை தமிழில் கற்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆட்சிநிலை
- தமிழர் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் உள்ளாட்சி தேர்தல்களில் பங்குபெற்று ஆட்சிப் பொறுப்பு வகிக்கின்றனர்.
- நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவியையும் பெற்றுள்ளனர்.
- சிங்கப்பூர், மொரிசியசு நாடுகளில் குடியரசுத் தலைவர்களாக தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
தாயகத்துடன் உறவுநிலை
- தாயகத்திலுள்ள வளங்களைத் தாம் வாழும் இடங்களுக்குக் கொண்டு செல்கிறார்கள்.
- உணவுப் பொருள்கள், உடைகள், திருவிழாபொருட்கள் இசைக்கருவிகள், தமிழ் நூல்கள், இதழ்கள் முதலிய பண்பாட்டுக்குத் தேவையானதை தயாகத்திலிருந்து தருவித்துக் கொள்கின்றனர்.
- பண்பாடு (ம) கலை நிகழ்ச்சிகளுக்குத் தயாகத்திலிருந்து கலைஞர்களை வருவித்து மகிழ்கின்றனர்.
- பண்பாட்டு ஊடாட்டம் (ம) வெளிநாடுகளில் தமிழ்ப் பண்பாடு பரவியுள்ளதை சான்றுடன் நிறுவுக.
வெளிநாடுகளில் தமிழ்ப் பாண்பாடு:
- “திரைகடலோடியும் திரவியம் தேடு” – ஒளவையார் கூற்று
- தமிழர்கள் பல நாடுகளோடு வணிகத் தொடர்பு கொண்டனர்.
- பிறநாடுகளில் தமிழரும், தமிழகத்தில் பிறரும் குடியேறினர்.
- சமயம், சிற்பம், ஓவியம் என பண்பாடு பரவியது
- தமிழ் இலக்கியங்களில் கன்னடச்செல்வாக்கு
கன்னடப் புலவர் ராஜவாங்கர் என்பவரது நூல் அரிச்சந்திர புராணத்தின் மூலமாகும்.
- தெலுங்கு மொழியில் தமிழ்ச்செல்வாக்கு
நன்னய்யாபட்டர் தமிழிலுள்ள எதுகை, மோனைத் தொடைகளை தெலுங்கில் புகுத்தினார்.
பண்பாட்டு ஊடாட்டம்
- சிங்கப்பூர்
- முருக வழிபாட்டு முறை
- தமிழ் ஆட்சி முறை
- அங்கோவர்ட்
- திராவிட கோயில் பாணி அமைப்பு
- திருமால் கோயில் தமிழ்மரபு படி உள்ளது
- இலங்கை
- பத்தினி வழிபாடு – மகாவம்சம் குறிப்பிடுகிறது.
- தமிழ்ப்பெயர் கொண்ட ஊர்கள் – திரிகோணமலே
- தமிழ் இலக்கியம் யாழ்பாணம் – பாணர் மரபு
- மலேசியா
- திருமணம், இலை போன்ற பல சொற்கள் மலேயா மொழியில் உள்ளது.
- கோலன், இலையன் என்ற மக்கள் முறை
- தமிழ் கலாச்சார விழாக்கள்
- மலேயா – தமிழ்ப் பெயர்
- ஜாவாத்தீவு
- த்ரிபவே – திரியம்பவே என பாவை பாடல்பாடும் விழா
- மீனன்காப்பு – பாண்டியனால் ஆளப்பட்ட பகுதி சான்று, மணிமேகலை
- சுமத்ராதீவு
சும்பிரிங்கு என்னும் பழங்குடியினரிடையே சோழிய, பாண்டிய, மெலியான, பெலவி (பல்லவ) தெகங் (தெக்காணம்) எனும் பெயர்கள் பழக்கம்
- தாய்லாந்து
லோ-ஜின்-ஜா எனும் மலைத்திருவிழாவிற்கு பாவை நோன்பு அடிப்படை
- கம்போடியா
- பல்லவர்களைப் போல இந்நாட்டு மன்னர் சூரியவர்மன், ஜெயவர்மன் என அழைப்பர்
- குதிரை – மா, கப்பல் – கப்பால் என குறிப்பு
- சம்பாத்தீவு
- இத்தீவின் முதல் அரசமரபைத் தோற்றுவித்தவர் தென்னிந்தியரே
- திருவிழாக்களில் சந்தனம் பயன்பாடு
- கல்வெட்டுகள் தென்னகத்து சாயல்
- பர்ம
- பாகன் எனுமிடத்தில் திருமால் கோயில்
- காஞ்சியிலிருந்த மகாயான பௌத்தம் இங்கே பரவியிற்று
- கோயில்களும் சிலைகளும் தமிழ்முறையில் அமைந்துள்ளன.
- ரீயூனியன் தீவு
- காவடி எடுத்தல்
- தேர் இழுத்தல் இன்றும் நடைபெறுகிறது.
- அயல் நாடுகளில் தமிழின் வளர்ச்சி நிலையை விவரி.
- தமிழ்மொழி வழக்கிலுள்ள நாடுகள்
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிஜி, மொரிக்ஷியஸ், அமெரிக்கா, கனடா, தென்னாப்பிரிக்கா, துபாய், அரபுநாடுகள் என 35 நாடுகளில் வழக்கில் உள்ளது.
- பணத்தாள் (ம) நாணயம்
மலேசியா (ம) சிங்கப்பூரில் தமிழில அச்சிடப்பட்டு வெளிவருகிறது.
- இணையவழித்தமிழ்
- சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.
- இணைய இதழ்கள் – சிங்கை இணையம், நம்குடும்பம்
- சிங்கப்பூரில் தமிழ் ஆட்சிமொழியாக உள்ளது
- ஆராய்ச்சிகள்
இலங்கை, மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பலநாடுகளில் தமிழ் இலக்கியம், இலக்கணம் மொழியமைப்பு, எழுத்தின் வரிவடிவம் பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
- அயல்நாடுகளில் திழ் வளர்ச்சிக்கு காரணமானோர்
- இந்திரா பார்த்த சாரதி
- இளந்திரையன்
- சுப்பு ரெட்டியார்
- இலங்கை நாடு
- புலவர்கள் – மருதன் இளநாகனார், நன்னாகனர்
- இதழ்கள் – ஈழகேசரி, வீரகேசரி, தினகரன்
- இலங்கைத் தமிழ் வனொலி
- மலேசியா நாடு
- படைப்பாளர்கள் – பரதிதாசன், முரசு நெடுமாறன்
- பத்திரிக்கைகள் – தமிழ்நேசன், தமிழ்சுடர், தமிழ் முரசு
- கோலாலம்பூரில் கவிதைக்களம், கவிதைப்பண்ணை ஆகிய அமைப்புகள் உள்ளன.
- சிங்கப்பூர்
- பழனிவேறுவின் கவிதைமலர்கள் நூல்
- மேற்கே உதிக்கும் சூரியன், வாழப்பிறந்தவன் என 40 புதினங்கள்
- இணைய இதழ்கள், இல்லப்பக்கங்கள் தமிழில் உள்ளன.
- அறிவியல் (ம) நிர்வாகத் துறையில் உள்ள தமிழர்களைப் பற்றி எழுதுக.
- திரு. சந்திரசேகர்
- டாடா குழும நிறுவனங்களின் தலைவர்
- ரத்தன டாடா சந்திரசேகரின் ஆதரவுடன், நிர்வாகத்தின் செயல்திறனுக்காக தலைமைப் பொறுப்பு பதவியில் தொடர்கிறார்.
- திருமதி. இந்திரா நூயி
- இவர் சென்னையைச் சேர்ந்தவர்
- பல ஆண்டுகளாக பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
- திரு. சுந்தர் பிச்சை
- இவர் மதுரையைச் சேர்ந்தவர்
- உலகின் முதன்மை தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.
- மென்பொருள் பொறியாளர்களில் சிறந்தவர்
- அமெரிக்க பாராளுமன்றம் இவரை அந்நாட்டின் இளைஞர்களுக்கு முன்மாதிரி என்று பாராட்டியது.
- மயில்சாமி அண்ணாதுரை
- இவர் கோவை மாவட்டத்தைச் சார்ந்தவர்.
- “இளையகலாம்” என அழைக்கப்படுகிறார்
- சந்திராயன் ஐ திட்டத்தின் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்
- சந்திராயன் ஐஐ திட்டத்திலும் பணியாற்றியவர்
- எழுதிய நூல் – கையருகே நிலா
- 1982 ல் இஸ்ரேவில் சேர்ந்தார்
- சர்.சி.வி. ராமன் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்
- இது வரை 5 முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார்
- அருணன் சுப்பையா
- திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்
- இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றவர்
- 1984ல் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்தார்.
- 2013ல் மங்கள் யான செயற்கைக்கோளை உருவாக்கிய இந்தியாவின் செவ்வாய் சுற்றுக்கலன் திட்டத்தின் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்
- திருமதி வளர்மதி
- அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்
- இவர் 1984 முதல் இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார்.
- 2012ல் உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநர்
- இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர்
- 2015ல் முதன் முதலில் அப்துல்கலாம் விருதைப் பெற்றவர்.
- அப்துல்கலாம்
- ராமேஸ்வரத்தை சார்ந்தவர்
- இந்தியாவின் 11வது குடியரசுத்தலைவர்
- இந்திய ஏவுகணை நாயகன் எனப்படுகிறார்.
- DRDO, ISRO வில் விண்வெளிப் பொறியாளராகப் பணியாற்றி உள்ளார்.
- பாரத ரத்னா விருதைப் பெற்றுள்ளார்.
- கைலாசவடிவு சிவன்
- நாகர்கோவில் பகுதியைச் சார்ந்தவர்
- இஸ்ரோவின் 9வது தலைவர், இப்பதவியைப் பெறும் முதல் தமிழர்
- 2015ல் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருந்து, ISRO வின் தலைவரானார்.
- சிவதானுப்பிள்ளை
ISRO
எந்திரவியல் துறை – டெல்லி
தற்போது – ISRO வில் பணி
- தமிழகத்தின் இயற்கை அமைப்புகள் (ழச) பழங்காலத் தமிழகத்தின் நிலவியல் கூறுகள் பற்றி விவரி.
நிலவியல் கூறுகள்
- தொல்காப்பியம் கூற்று
‘வடவேங்கடம் தென்குமரி ஆலிடைத் தமிழ் கூற்று நல்லுலகத்து”’ என்பதிலிருந்து பழங்காலத்தமிழகம் வடக்கே வேங்கடம் முதல் தெற்கே குமரி வரை பரவி இருந்ததை அறியலாம்.
- மொழியின் அடிப்படை:
தமிழ் கூறும் நல்லுலகம் என்பதிலிருந்து தமிழ்நாடு என வழங்கலாயிற்று.
- பண்டைய தமிழகம் மலை, காடு, சமவெளி, கடல் ஒட்டிய நிலப்பகுதியாக பரந்து விரிந்து காணப்பட்;டது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனப்பட்டன.
- குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்த நிலம் பாலை எனப்பட்டது.
- அரசியல் பிரிவுகள்
சேர, சோழ, பாண்டிய, கொங்கு நாடு.
- மேற்கு தொடர்ச்சி மலைகளும் கிழக்கு தொடர்ச்சி மலைகளும் இரு கடற்கரை ஓரங்களிலும் அமைத்து நீலகிரி மாவட்டத்தில் ஒன்றிணைகின்றன.
- மேற்கு (ம) கிழக்கு தொடர்ச்சி மலைபகுதிக்கு அருகில் சமவெளிகள் உள்ளன. நீலகிரிக்குத் தெற்கிலும் பல குன்றுகளை அடுத்தும் சமவெளிகள் உள்ளன.
- இச்சமவெளியில் வாழ்ந்த மக்கள் தனித்தனியே வாழ்ந்துள்ளனர். குறுநில மன்னர்களின் அரசுகளும் தனித்தனியாக இயங்கிவந்தன.
- இவ்வாறு பிரிந்து வாழ இயற்கை அமைப்பை காரணமானது
- நிலத்தின் தன்மைக்கேற்ப மக்களின் வாழ்க்கை (ம) ஒழுக்கம் அமைந்தது