6.கல்வியறிவின்மை

கல்வி கற்பதை வலியுறுத்தும் அரசியலமைப்பு விதிகள்:

சரத்துகள்: 15, 21A, 30(1), 45, 51A (K), 51(h)

சரத்து 15

பாலின அடிப்படை பாகுபாடு காட்டக்கூடாது.

சரத்து 21A

 6 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கட்டாய (ம) இலவசக் கல்வியை பெற வேண்டும் என்பது அடிப்படை உரிமை (86வது திருத்தம் – 2022)

சரத்து 30 (1)

            சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிறுவ உரிமை

சரத்து 45

குழந்தைகள் (ம) 6 வயதிற்குட்பட்டோரின் கல்வி (ம) பாதுகாப்பினை உறுதி செய்தல் அரசின் கடமை – 86வது திருத்தம் 2002

சரத்து 51A (k)

6 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பினை வழங்குவது ஒவ்வொரு இந்தியக் குடிமகனான பெற்றோர் (ம) காப்பாளரின் கடமையாகும். – 86வது திருத்தம் 2002

சரத்து 51A (h)

விஞ்ஞான நோக்கு, மனிதாபிமானம், ஆராய்ந்து சீர்திருத்தம் செய்யும் மனநிலை முதலியவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

42வது திருத்தம் – 1976

கல்வி மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

கல்வி உரிமை பாதிக்கப்பட்டால் சரத்து 32, 226

எழுத்தறிவின்மைக்கான காரணங்கள்:

  1. பரவலாகியுள்ள 21.9% வறுமை (ம) வேலைவாய்ப்பின்மை
  2. மிக விரைவான மக்கள் தொகை பெருக்கம் (ம) வளப்பற்றாக்குறை
  3. கல்விக்கு ஆகும் அதிகபட்ச செலவு
  4. ஏற்கனவே படித்த மக்களுக்கு வேலையில்லாநிலை
  5. பள்ளிகளில் (ம) கல்லூரிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவு.
  6. கல்வி உதவித்தொகை, ஊக்கத்தொகை போன்றவை கிராமப்பகுதிகளை சென்றடைவதில்லை.
  7. குடும்பத்தில் நிலவும் ஏழ்மைநிலை.
  8. பெற்றோர்களின் குறைந்த கல்வி.
  9. அரசின் குறைந்த கல்வி நிதி ஒதுக்கீடு – 6% பட்ஜெட்டில்.
  10. ஆரம்ப பள்ளிகள் திறம்பட செயல்பாடாமை.
  11. சமத்துவமின்மை.
  12. பெண் குழந்தைகளை பழக்க வைப்பதில் ஏற்படும் தடைகள்.
  13. எழுத்தறிவு பெறும் வயது வந்தவர்கள் தொகையைவிட, மக்கள் தொகை பெருக்கம் மிக அதிகமாக உள்ளது.
  14. புதிய மாணவர்களைச் சேர்ப்பதிலும், சேர்ந்துள்ள மாணவர்களைத் தொடர்ந்து கல்வி கற்கச் செய்வதிலும் ஆரம்பப் பள்ளிகள் திறம்பட செயல்படாமை.
  15. அந்நியர் ஆட்சியால் ஆரம்பக் கல்வியைப் பரப்ப போதுமான நடவடிக்கை எடுக்காதது.
  16. மக்களிடையே விழிப்புணர்வு இன்மை

நாட்டின் வளர்ச்சியில் எழுத்தறிவின்மையின் பொருளாதார தாக்கம்:

  1. அடிப்படைத் தகவல்களைக் குறைவாக புரிந்துகொள்ளும் (ம) உள்வாங்கும் திறன் உருவாதல்
  2. இளநிலை பட்டதாரிகள் வேலையின்மை விகிதம் 2 முதல் 4 மடங்கு அதிகமாதல்
  3. குறைந்த வருமானம்
  4. குறைவான தரமுள்ள வேலைவாய்ப்புகள்
  5. வாழ்க்கை முழுவதும் கற்கும் திறன் (ம) தொழில் மேம்பாட்டுத்திறன் குறைதல்
  6. நிலையற்ற பொருளாதார நிலை
  7. குடும்பங்களில் உள்ள நபர்களிடையே கல்வியைப் பற்றிய குறைவான மதிப்பீடு உருவாதல்
  8. குறைவான சுய மதிப்பீடு
  9. கல்வியறிவானது ஒவ்வொரு தனி மனிதனின் ஆயுதம்
  10. எழுத்தறிவின்மையால் வேலைபார்க்கும் இடங்களில் ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டாலும், சரியான மருத்துவ முறைகளை மேற்கொள்வதில்லை.

தற்போதைய கல்வி முறையின் குறைபாடுகள்:

  1. தற்போதைய கல்விமுறை சமூகத்தின் சமூக பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்வதாக இல்லை.
  2. கல்விக்கான பட்ஜெட் திட்ட ஒதுக்கீடு மிகக்குறைவு (6% க்கும் கீழ்)
  3. மாறிவரும் சமூக நிலைகளுக்கு ஏற்ப அறிவைப் பெருக்கும் ஒன்றாக இல்லை.
  4. உலகில் வளர்ந்து வரும் தொழில் நுட்ப சவால்களை எதிர்கொண்டு, துறைசார்ந்த வேலை வாய்ப்புகளை பெரும் திறனுடையதாக இல்;லை.
  5. நமது கல்விமுறை மதிப்பீடு சார்ந்ததாக இல்லை. மேலும் இந்திய மயமாக்கம் உள்ளதாக இல்லை.
  6. இது சிறந்த தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அதிகார வர்க்கத்தினர், தொழிலதிபர்கள் ஆகியோரை உருவாக்கத் தவறிவிட்டது.
  7. தற்போதைய கல்வி முறை தனிநபர் பயனைக் கருத்தில் கொண்டுள்ளது. இது பொருள்முறை சாரா உயர்ந்த மனிதர்களை உருவாக்கத் தவறிவிட்டது.
  8. புதிய தலைமுறையினரிடையே தேசிய உணர்வை ஊட்ட தவறிவிட்டது.
  9. வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது

எழுத்தறிவின்மை ஒழிப்புத்திட்டம்:

  1. பெருகிவரும் கல்வி நிறுவனங்கள் இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு கல்வியறிவை அளித்துள்ளது.
  2. பெண்கல்வி விகிதம் அதிகரித்துள்ளது.
  3. ஆண் – பெண் சமூக இடைவெளி குறைந்துள்ளது.
  4. கல்வியறிவு விகிதம் அதிகரித்துள்ளது.
  5. ஆரம்ப கல்வி அதிகரித்துள்ளது.
  6. இடை நிற்றல் விகிதம் குறைந்துள்ளது.

திட்ட தோல்விக்கான காரணங்கள்:

  1. பல முயற்சிகளை அரசு எடுத்த போதும், உணவுப் பொருள் பற்றாக்குறை, வேலையின்மை போன்றவற்றால் தோல்வி அடைந்தது.
  2. வயது வந்தோர் கல்வித்திட்டம், அடிமட்ட நிலையில் உள்ளவர்களின் ஆதரவைப் பெறவில்லை.
  3. திட்டங்கள் மாநிலத்தை மனதில் வைத்தே முடிவு செய்யப்பட்டன.
  4. திட்டங்கள் கிராமங்கள், வட்டாரங்கள் அங்குள்ள மக்களின் தேவைகள், பிரச்சனைகளை அடையாளம் கண்டு அதற்கேற்ப தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
  5. போதிக்கும் முறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டதே தவிர, தொண்டு நிறுவனங்கள் எழுத்தறிவுடன் செயல்திறனையும் சொல்லித்தர ஊக்கம் தரப்படவில்லை.

பிற காரணங்கள்:

  1. சமுதாயத்தின் ஈடுபாட்டுக்குறைவு
  2. அரசு நிர்வாகத்தின் போதுமான ஆதரவுக்குறைவு
  3. கற்கவருபவர்களுக்கு போதுமான ஆர்வமின்மை
  4. போதுமான பயிற்சி இன்மை
  5. கல்வியறிவு பெற்றதன் பின்தொடர் திட்டங்கள் இல்லாதது
  6. NGO உள்ளாட்சி அமைப்பு, மக்கள், ஆசிரியர்கள், அரசு என ஒருங்கிணைக்கும் திட்டங்கள் வகுக்கப்படவில்லை.

தோல்விக்கான முக்கிய காரணங்கள்:

  1. கல்வி மையங்களில் போதுமான கல்வி உபகரணங்கள் இல்லை.
  2. கல்வி மையங்களை கற்போர் தேடிச் செல்ல ஊக்கத்தொகை ஏதும் வழங்கப்படவில்லை.
  3. கற்பவர்கள் மையங்களுக்கு கற்க வராமல் இருப்பதற்கான காரணங்கள். நேரமின்மை, பொருளாதார வசதியின்மை, குடும்பத்தில் விருப்பமின்மை
  4. திட்டத்தை அமல்படுத்துபவர்களிடையே அக்கறையின்மை
  5. கல்வியறிவு பெற்றால் மலிவான கூலியாட்கள் கிடைக்காதென சிலர் மறைமுகமாகத் தடை செய்தனர்.
  6. திட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு போதிய பயிற்சி இன்மை
  7. நீக்குபோக்கற்ற சட்டதிட்டங்கள்
  8. சரியான மதிப்பீட்டு சீராய்வு முறை இல்லை.
  9. NLM திட்டத்தின் கீழ் கல்வி கற்க நிர்ணயிக்கப்பட்டிருந்த 6 மாத காலம் அதிகம்
  10. பாடத்திட்டம் கடினமாக இருந்தது
  11. வயது வந்தோர் கல்வித்திட்டத்தில் தன்னார்வம் என்பது கைவிடப்பட்டு கட்டாயம் என்ற நிலை ஏற்பட வேண்டும்.

எழுத்தறிவின்மை:

  1. ஒரு மனிதர் ஏதேனும் ஒரு மொழியில் எழுதவோ, படிக்கவோ தெரியாதநிலை எழுத்தறிவின்மை எனப்படும்.
  2. இந்திய மக்களில் 26% பேர் கல்வியறிவற்றோர்
  3. மேலும் பெரும்பாலானோர் குறைகல்வியறிவு உடையோர்
  4. கல்வியறிவின்மையால் சமூக பழக்க வழக்கங்கள் வறுமை, வேலையின்மை போன்ற காரணிகள் அதிகரித்து மக்கள் தொகையை வளர்ச்சி அடையச் செய்கிறது.

எழுத்தறிவின்மையும் மக்கள் தொகைப் பெருக்கம்:

  1. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகை – 121 கோடி
  • இந்தியாவின் எழுத்தறிவு – 74.04%
  • தமிழ்நாட்டின் எழுத்தறிவு – 80.33%
  1. பொதுவாக பெண்கல்வியால் மக்கள்தொகை பெருக்கம் குறையும் என நம்பப்படுகிறது. ஆனால் புள்ளி விவரங்கள் இக்கூற்றினை மெய்ப்பிக்கவில்லை.
  2. எடுத்துக்காட்டாக: 1981 – 1991 இடையில் ராஜஸ்தானில் பெண்கல்வி அளவு 9.42% உய்ந்தது. ஆனால் மக்கள்தொகை பெருக்க அளவு 0.35% மட்டுமே குறைந்தது.
  3. மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து, சிக்கிம், திரிபுரா போன்ற சிறிய மாநிலங்களிலும் இதே போன்றநிலை காணப்படுகிறது.
  4. ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதத்தையும் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தையும் எடுத்துக் கொண்டால், அவை இரண்டிற்கும் இடையே எவ்விதமான நேரடி தொடர்பும் காணப்டுவதில்லை.
  5. இதே போன்ற கணக்கெடுத்தலில், கல்வி விகித அதிகரிப்பால் 11 மாநிலங்களில் மக்கள் தொகை பெருக்க விகிதம் குறைந்தது எனவும். 7 மாநிலங்களில் அதிகரித்தது 2 மாநிலங்களில் எழுத்தறிவு அதிகரித்தும் மக்கள்தொகைப் பெருக்கம் கூடவும் இல்லை குறையவும் இல்லை.
  6. எனவே எழுத்தறிவு நிலை அதிகரித்தால், மக்கள் தொகை வளர்ச்சி தானாக குறைந்துவிடும் எனக் கருதுவது சரியானது அல்ல.
  7. அதே நேரத்தில் (எழுத்தறிவு நிலையினை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்காமல், முழுமையாக புறக்கணிப்பதும் தவறானது).
  8. பெண்கள் எழுத்தறிவு பெறுவதால் இளம்சிசு மரணம் குறைகிறது (ம) முதியோர் பாதுகாப்பு அதிகரிக்கிறது.
  9. எப்படி இருப்பினும் எழுத்தறிவின்மை ஒரு சாபக்கேடு, அதனை எப்படியாவது ஒழித்தே தீர வேண்டும்.

எழுத்தறிவின்மையும் மாணவர்களும் – யக்ஷ்பால் குழு:

  1. வயது வந்தோர் கல்வித்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மாணவர்களை ஈடுபடுத்தலாம்ட என பேராசிரியர் யக்ஷ்பால் கருத்து தெரிவித்தார்.
  2. எல்லாப் பல்கலைக்கழகம் (ம) கல்லூரிகளை மூடிவிட்டு (ஒராண்டு காலத்திற்கு மட்டும் எழுத்தறிவு இயக்கத்தில் மாணவர்கள் பணியாற்ற வேண்டும் என்றார்.
  3. திட்டக்குழுவும் இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கமும் 1991ல் ஆய்வு செய்தது
  4. பின் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களின் பாடத்திட்டத்தில் எழுத்தறிவு இயக்கத்தை இடம்பெற (ம) கோடைவிடுமுறையில் மாணவர்கள் இப்பணியில் ஈடுபட பரிந்துரைத்தது.

மாணவர்களைப் பயன்படுத்துதல்:

  1. எழுத்தறிவு இயக்கத்தில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையைப் போக்க, நமது மாணவர் சக்தியால் முடியும்.
  2. புள்ளி விவரத்தின் படி, எழுத்தறிவு இல்லாத வயது வந்தவர்களில் 80% பேர், நாட்டில் இந்தி பேசும் பகுதிகளிலேயே வாழ்கின்றனர்.
  3. P, பீகார், ராஜஸ்தான், M.P, H.P, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களை கோடை விடுமுறைக் காலத்தில், வயது வந்தோர் கல்விக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  4. மருத்துவம், பொறியியல் போன்ற கல்விநிலைய அனுமதியின் போது, அவர்களுக்கு முன்னுரிமையம் தரலாம்.
  5. எழுத்தறிவு பிரச்சாரங்கள் மேற்கொள்வதில் பல்கலைக்கழகங்கள் அண்மை அணுகுமுறையினை பின்பற்ற வேண்டும்.
  6. இத்திட்டமானது குறிப்பிட்ட காலத்திற்கு உட்பட்டதாகவும், குறைவான செலவு கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
  7. மாணவர்கள் எழுத்தறிவற்றவர்களுக்கு கல்வி போதிப்பதற்காக, இரண்டு மாத காலத்திற்கு தினம் 2 – 3 மணி நேரம் செலவிட வேண்டும்.
  8. கல்வி கற்போருக்கான செலவும் மிகக் குறைவாக இருக்க வேண்டும்.
  9. தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண் அளித்தல், அவர்கள் விரும்பும் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான சிறப்பு சலுகைகள் அளித்தல் மூலம் கல்வியினை பரவச் செய்வதில் மாணவர்களை ஈடுபடுத்தலாம்.
  10. இந்த மாணவர்கள் தமது அருகாமையில் வசிக்கும் 10 பேர் கொண்ட குழுவினருக்கு கல்வி கற்றுத்தர முடியும்.
  11. இதனால் பல லட்சக்கணக்கானோர் கல்வியறிவு பெற் இயலும்.

இந்தியாவின் கல்விநிலை:

  1. 1901 – 5.3% 3% – 16.7 → 74.4%
  2. 1951 – 1.7%
  3. 1991 – 52.11%
  4. 2001 – 65%
  5. 2011 – 74.04%

தமிழ்நாட்டின் கல்வி நிலை 2011ல் 80.33%

இந்தியாவின் கல்வி மேம்பாட்டு நிலை:

பிரிட்டிக்ஷ் வருகைக்கு முன்:

  1. கல்வியறிவு விகிதம் – 3.2%
  2. கிழ்தட்டு மக்களுக்கு கல்வியறிவு மறுக்கப்பட்டது.
  3. மேல்தட்டு மக்களுக்கு குருகுலக்கல்வி வழங்கப்பட்டது
  4. பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டது.

பிரிட்டிக்ஷ் ஆட்சியின் போது:

  1. பட்டயச் சட்டம் – 1813: கல்விக்காக 1 லட்சம் ஒதுக்கப்பட்டது.
  2. மெக்காலே குழு – 1835: ஆங்கிலம் பயிற்று மொழியாக்கப்பட்டது.
  3. உடல் கல்வி அறிக்கை – 1854 : இந்திய கல்வியின் மகாசாசனம்
  4. ஹண்டர்குழு அறிக்கை – 1882
  5. சர்கண்ட் திட்டம் – 1944
  6. பல்கலைக்கழகம் – 1904

சுதந்திரத்திற்கு பின்பு:

  1. தேசிய கல்விக்கொள்கை – 1986 (1968), 2019
  2. மதிய உணவுத்திட்டம் – 1995
  3. SSA – 2001
  4. RMSA – 2010
  5. RTEACT – 2009

எழுத்தறிவின்மை குறைப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள்:

கொள்கைகள் குழுக்கள் எசீசாட் – 3

அரசின் நடவடிக்கைகள் → ஐந்தாண்டு திட்டங்கள்

1.அடிப்படை உரிமை

பட்ஜெட் – நிதி ஒதுக்கீடு (6%), மதிய உணவு திட்டம்

நமது அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக கல்வி உரிமையை மாற்றியது.

2.கல்வி சார்ந்த சரத்துகள்

சரத்து 21A, 30(1) 45, 51A(k), 51A(h), 15

3.கல்விக் குழுக்கள்

பல்கலைக்கழக மானியக்குழு                 – 1948 (தாய் மொழிக்கல்வி)

இடைநிலைக் கல்விக்குழு                       – 1953 (லட்சுமண முதலியார்)

தேசிய கல்விக் குழு                                    – 1968 (10 + 2 + 3 முறை)

4.தேசியக் கல்வி கொள்கை

தேசிய கல்விக் கொள்கை – 1968 (10 + 2 + 3 முறை)

புதிய கல்விக் கொள்கை – 1986 (ஆரம்ப கல்வி கட்டாயம்)

புதிய கல்விக் கொள்கை – 2019

5.கருப்பலகைத் திட்டம் – 1992

பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதி, ஆசிரியர்களின் நியமனம் ஆகியவற்றை மேம்படுத்தியது.

6.குறைந்த பட்சகற்றல் திட்டம் – 1991

பேராசிரியர் டேவ்ஸ் தாவே அவர்கள் அறிமுகப்படுத்திய திட்டம் மூலம் ஆரம்ப கல்வி வளர்ச்சி அடைந்துள்ளது.

7.தேசிய எழுத்தறிவு இயக்கம் – 1988

2007 க்குள் 75% எழுத்தறிவு நிலையை எட்ட 15 – 35 வயதினருக்கு செயலறிவுக் கல்வி வழங்குதல்.

8.மாவட்ட தொடக்கக்கல்வித்திட்டம் – 1994

அனைவருக்கும் தொடக்கக் கல்வியை வலுவூட்டும் விதமாக, சுமார் 15,000 பள்ளிகள் துவக்கப்பட்டன.

9.தேசிய வயது வந்தோர் கல்வித்திட்டம் – 1978

15 – 35 வயதிற்குட்பட்டோருக்கு கல்வி வழங்குதலும் எழுத்தறிவற்ற மக்களின் எழுத்தறிவை மேம்படுத்துதலும் நோக்கமாகும்.

10.ஊரக எழுத்தறிவு செயல்திட்டம் – 1986

நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் (ம) தன்னார்வ தொண்டர்கள் மூலம் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

11.ஜன் சிக்க்ஷன் சன்ஸ்தன்

இது ஒரு முறைசாரா தொழிற்கல்வி வழங்கும் நிறுவமாகும்

12.சுக்சார் பாரத்திட்டம் – 2009

வயதுவந்தோர் கல்வியை மேம்படுத்தும் பொருட்டு, முறையான கல்வி பெறாதவர்களின் எழுத்தறிவை மேம்படுத்துகிறது.

  1. SSA 2000 – 01

2010 க்குள் 6 – 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வியை வழங்குதல்

  1. RMSR – 2009

இடைநிலைக்கல்வியை 2017 க்குள் அனைவருக்கும் கிடைக்கும் படிச் செய்தல்

15.கல்வி உரிமைச் சட்டம் 2009

6 – 14 வயதுள்ள எல்லாக்குழந்தைகளுக்கும் இலவச (ம) கட்டாயக் கல்வி பெறுவது அடிப்படை உரிமையாக்கப்பட்டு உள்ளது – சரத்து 21A

16.தொடர்கல்வித்திட்டம் – 1995

நவீன கல்வி அறிவு பெற்றவர்களுக்கான, கல்வியறிவிற்கு பிந்தைய திட்டமாகும்.

  1. கல்விக்கான செயற்கைக் கோள் – 2004

எஜிசாட் – 3, கல்வித்துறைக்காகவே உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோளாகும்.

18.தேசிய கல்வி ஆராய்ச்சி (ம) பயிற்சி அமைப்பு 1961

பள்ளிக்கல்வி தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்குவது (ம) உதவியாக இருக்கிறது.

  1. ரசிக் யான்

SSA, RMSR, ஆசிரியர்கள் கல்வி என இணைந்தது

கல்வி சார்குறியீடுகள் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி

இந்தியா                     தமிழ்நாடு

  1. எழுத்தறிவு விகிதம் 74.04%                        80.33%
  2. ஆண்கள்
  3. பெண்கள் 65.46%                        73.86%

20.கல்விக்காக தமிழக அரசின் நடவடிக்கைகள்

  • மதிய உணவுதிட்டம்
  • கல்வி தொலைக்காட்சி
  • 16 இலவச பொருட்கள்
  • இல்லம் தேடி கல்வித் திட்டம்

தேசிய கல்விக் கொள்கை:

  1. 1966 – கோத்தாரி கல்விக்குழு அமைக்கப்பட்டது.
  2. 1966 – அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
  3. 1968 – தேசிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டது.
  4. 1986 – புதிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
  5. 2019 – தேசிய கல்விக்கொள்கை மசோதா அறிமுகம்

தேசிய கல்விக்கொள்கையின் சிறப்பியல்புகள்:

  1. 10 +2 +3 கல்விமுறையை நாடு முழுவதும் அறிமுகம் செய்தல்
  2. தொழிற்கல்வியுடன் கூடிய வயதுவந்தோர் கல்வித்திட்டம்
  3. கல்வியின் மதிப்பினை பெருகச் செய்தல்
  4. ஆசிரியர்கள் கடமை, பொறுப்புணர்வை அதிகரித்தல்
  5. பட்டங்களை பணியிலிருந்து பிரித்தல்
  6. தேர்வு முறையில் சீர்திருத்தம்
  7. விளையாட்டு, உடற்கல்விக்கு முக்கியத்துவம்
  8. பெண்கள், தாழ்த்தப்பட்டோர், SC/ST ஆகியோருக்கு கல்வியில் சமவாய்ப்புகளை ஏற்படுத்தி தருதல்
  9. சமூக தேவைகளுக்கு ஏற்ப உயர்கல்வியில் மறுவரைவு செய்தல்
  10. முறையான பாடத்திட்டத்தை உருவாக்குதல்
  11. அறிவியல் (ம) தொழில்நுட்ப ஆராய்ச்சி
  12. 14 வயது வரை இலவச கட்டாயக் கல்வி
  13. முதல் 10 ஆண்டு பள்ளிக்கல்வியில் 5 ஆண்டுகள் ஆரம்ப கல்வியாகவும், 3 ஆண்டுகள் நடுநிலைப்பள்ளி கல்வியாகவும், 2 ஆண்டுகள் உயர் கல்வியாகவும் இருத்தல் வேண்டும்.
  14. அனைவருக்கும் தொடக்கக்கல்வி
  15. வயது வந்தோருக்கான கல்வி அறித்தல்

தேசிய கல்விக் கொள்கை மசோதா – 2019:

நோக்கம்:

“இந்தியாவை உலகளாவிய அறிவுசார் வல்லரசாக மாற்றுதல்”

நிறைகள்

  1. அனைவருக்கும் பள்ளி படிப்பை கிடைக்கச் செய்தல்
  2. இதன் மூலம் சுமார் 2 கோடி பள்ளி மாணவர்கள் மீண்டும் கல்வி நிறுவனங்களுக்கு வர முடியும்
  3. 5 + 3 + 3 + 4 கல்வி முறை
  4. வயது 3 – 8 8 – 11, 11 – 14, 14 – 18
  5. இதில் அங்கன்வாடி (ம) முன் பள்ளி கல்வி சேர்க்கப்பட்டால் 12 ஆண்டுகள் பள்ளிபடிப்புடன் 3 ஆண்டுகள் சேர்க்கப்படும்
  6. கல்விக்கான தேசிய பாடத்திட்டம் (ம) கலைத்திட்டத்தை NCERT வடிவமைக்கும்.
  7. இத்திட்டம் இரு பாலரையும் உள்ளடக்கிய நிதியத்தை அமைக்கும்.
  8. தேசிய கல்விக்கொள்கை பராக் எனும் திறானயும் முறையைக் கொண்டது.
  9. ஒவ்வொரு மாநிலம், மாவட்டத்திலும் பகல்நேர உறைவிடப்பள்ளி நிறுவப்படும்.
  10. IIT, IIM நிகரான கல்வி (ம) ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டது.
  11. அரசு (ம) தனியார் கல்வி அமைப்புகளுக்கு ஒரே வகையான அங்கீகாரம் 12 இடைநிற்றல் தவிர்ப்பு

 

கல்வி உரிமைச்சட்டம் – 2009:

கல்வி உரிமைச்சட்டம் – 2009 – 2010 ஏப்ரல் 1 நடைமுறை:

  1. சட்டவிதி 21A (ம) கல்வி உரிமைச்சட்டமானது 2010, ஏப்ரல் 1 அன்று நடைமுகை;கு வந்தது.
  2. கல்வி உரிமைச் சட்டத்தின் தலைப்பில் “இலவச (ம) கட்டாய” என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன.

சட்டத்தின் சிறப்பியல்புகள்:

  1. 6 – 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச (ம) கட்டாயக்கல்வி பெறுவது அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது.
  2. தொடக்க கல்வி பெறுவது குடிமக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமை அடிப்படை உரிமை
  3. தனியார் பள்ளிகள் தங்களது வகுப்பறையில் உள்ள மொத்த மாணவர்களில் 25% இடத்தை, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.
  4. இந்த மாணவர்களுக்கான நிதி அரசு அளிக்கும்
  5. இந்த ஒதுக்கீட்டு முறையின் கீழ் எந்த ஒரு இடமும் நிரப்பப்படாமல் காலியாக விடக்கூடாது.
  6. இந்த குழந்தைகள் பள்ளியில் சரிசமமாக நடத்தப்பட வேண்டும்.
  7. 3 வருடத்திற்குள் பள்ளிகள் அனைத்தும் தரநிர்ணயங்களை பூர்த்தி செய்திட வேண்டும்.
  8. அனைத்து தனியார் பள்ளிகளும் அங்கீகாரம்பெற தவறும் பட்சத்தில், ரூ 1லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
  9. ஆசிரியர்களுக்கான தகுதிகள், பயிற்சிவிதிமுறைகள் வகுக்கப்படும்.
  10. நன்கொடைகள் (ம) கட்டாய நன்கொடைகளுக்கு அனுமதி இல்லை.
  11. பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர் / பெற்றோரிடம் நேர்காணல் (அ) தேர்வு நடத்தக் கூடாது.
  12. இந்த சட்டம் செயல்படுவதனை கண்காணிக்க ஓர் ஆணையம் அமைக்கப்படும்
  13. பள்ளி மேலாண்மை குழுவில் உள்ள மொத்த உறுப்பினர்களில் 75% பெற்றோர்கள் / பாதுகாவலர்கள் இருக்க வேண்டும்.
  14. குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இச்சட்டம் செயல்படும் விதத்தினை கட்டாயம் கண்காணிக்க வேண்டும்.

சட்டவிதி:

  1. 51A (k) ஒவ்வொரு தந்தை (அ) காப்பாளர்கள் தங்களது குழந்தைகளுக்குத் தேவையான அடிப்படை கல்வியை வழங்க அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.
  2. கல்வி உரிமை மறுக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட நபர் மனு மூலம், சரத்து 32, சரத்து 226 ன் படி உச்ச / உயர் நீதிமன்றத்தை அணுகலாம்.

சமீபத்திய மாற்றங்கள்:

  1. ஜனவரி 3, 2019 அன்று கட்டாய கல்வி உரிமை (திருத்தம்) சட்டம் 2009 ஆனது பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது.
  2. இந்த மசோதா பள்ளிகளில் செயல்பாட்டில் உள்ள கட்டாய தேர்ச்சி கொள்கையினை நீக்க முற்படுகிறது.

சர்வ சிக்க்ஷா அபியான் – 2000 – 2001:

  1. அனைவருக்கும் ஆரம்ப கல்வியை கிடைக்கச் செய்தல்
  2. அடிப்படையிலிருந்து சமூக நீதியை ஊக்கப்படுத்தும் வாய்ப்பினை வழங்குகிறது.
  3. மத்திய, மாநில, உள்ளாட்சி அரசு அமைப்புகளிடையே ஒரு கூட்டுறவை ஏற்படுத்துகிறது.
  4. பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகங்களின் செயல்பாடு கூறப்பட்டுள்ளது.

நோக்கங்கள்:

  1. 2010 க்குள் 6 முதல் 14 வய வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் பயனுள்ள ஆரம்பக் கல்வியை வழங்குதல்
  2. 0 – 14 வயது வரை குழந்தைகளின் நலன் (ம) ஆரம்பக்கல்வியின் முக்கியத்துவத்தை உணர வைப்பது.
  3. இயற்கை சூழலுடன் இணைந்து குழந்தைகள் தங்களது ஆற்றலை வள்த்துக் கொள்ளுதல்
  4. மதிப்புக் கல்வியை அளித்தல்
  5. தீவிரமான சமுதாய பங்களிப்பினை, பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து சமூக, வட்டார, பாலின வேறுபாடின்மையை கட்டமைத்தல்

கொள்கைகள்:

  1. பள்ளியிலுள்ள அனைத்துக் குழந்தைகள் கல்வி உறுதிமையங்கள் மாற்றுப் பள்ளிகளில் பள்ளிக்குத் திரும்புவோம்” முகாம் 2003 ல் ஆரம்பிக்கப்பட்டது.
  2. 5 வயது நிரம்பிய அனைத்துக் குழந்தைகளையும் 2007 க்குள் ஆரம்பம் பள்ளியில் சேர்க்க வேண்டும்.
  3. அனைத்துக் குழந்தைகளும் 2010 க்குள் ஆரம்பக் கல்வியை பூர்த்தி செய்திக்க வேண்டும்.
  4. ஆரம்பக்கல்வி தரமானதாகவும், வாழ்க்கைக்கான கல்வியாக அமையும் நோக்கத்தில் வலுப்படுத்த கவனம் செலுத்த வேண்டும்.
  5. அனைத்து சமூக – பாலின வேறுபாடுகள் ஆரம்பநிலையில் 2007 க்குள் களையப்பட்ட வேண்டும்.

ராக்ஷ்ட்ரிய மத்திய சிக்க்ஷா அபியான் – 2009:

  1. SSA வின் பயனாக பல லட்சம் குழந்தைகள் 8ம் வகுப்பு வரை பயின்றால், இடைநிலைக் கல்விக்கான தேவை அதிகரித்தது.
  2. மார்ச் 2009 ல் தொடங்கப்பட்டது.
  3. இடைநிலைக் கல்வியின் தரத்தை உயர்த்துதல் (ம) அனைவருக்கும் கிடைக்கும் படிசெய்தல் நோக்கமாகும்.
  4. இத்திட்டத்திற்கான மத்திய, மாநில அரசின் செலவுகள் 75:25
  5. 10 வகுப்பு வரையிலான கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

நோக்கம்:

  1. குடியிருப்பு பகுதியிலிருந்து 5 கி.மீ தொலைவிற்குள் இடைநிலைக் கல்வி நிலையம் அமைத்தல்
  2. 7 – 10 கி.மீ தொலைவிற்குள் மேல்நிலைக்கல்வி நிலையம் அமைத்தல்
  3. இடைநிலைக் கல்வியை 2017 க்குள் கிடைக்கச் செய்தல்
  4. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு அதிக முக்கியத்துவம் வழங்குதல்
  5. நலிவடைந்த பிரிவினர், சமுதாயத்தில் பின்தங்கியோரின் குழந்தைகள் இடைநிலைக் கல்வி பெற வாய்ப்புகளை ஏற்படுத்தி தருதல்

வயது வந்தோருக்கான கல்வித்திட்டங்கள்:

1.அடிப்படை கல்வி – 1947 வரை:

  • இரவு நேர பள்ளிகள் விரிவாக்கம்
  • இது பாரம்பரிய கல்வி அணுகுமுறை உடையது
  • பயிற்சி காலம் – 2 ஆண்டுகள்
  • இதன் அடிப்படையில் 1938 – 39 ல் தூதரக பிராந்திய கல்வி பிரச்சாரங்கள் பல தொடர்ந்து நடைபெற்றது.

2.குடிமை கல்வி – 1949 – 66:

  • இது வாழ்க்கை சம்பந்தப்பட்ட அணுகுமுறையை உடையது.
  • சமூகக் கல்வியின் மீது கவனம் செலுத்துதல்
  • இது 1952ல் சமுதாய வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டது.

3.செயல்பாட்டுக் கல்வி 1967 – 77:

  • தொழிற்கல்வியை அடிப்படையாகக் கொண்டது.
  • கல்வியானது கற்போரின் தொழிலோடு இணைக்கப்பட்டு, அவரின் முன்னேற்றத்துடன் நேரிடை தொடர்பு உடையது.
  • இது விவசாயிகளுக்கான கல்வி மீது கவனம் செலுத்தியது.

முன்னேற்றம் சார்ந்த கல்வி 1978 முதல்:

  • சமூக மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது.
  • கல்வியானது ஒரு தனிமனிதனின் சுதந்திரமான செயல்பாடு (ம) முழுவளர்ச்சிக்கும் காரணமாகிறது.
  • முழு கல்வி இயக்கத்தின் மீது கவனம் செலுத்தப்பட்டது.

 

தேசிய வயதுவந்தோர்க்கான கல்விதிட்டம் 1978 அக்டோபர் 2:

  • 15 – 35 வயது வரை உள்ள கல்வி அறிவற்றவர்களுக்கு கல்வியை பரப்புதல்
  • இது மத்திய, மாநில NGO, பல்கலைக்கழக கல்லூரிகள், இளைஞர் அமைப்புகளை இணைந்த ஒரு கூட்;டமைப்பாகும்
  • செயல்பாட்டு கல்வி அளித்தல்
  • அரசின் சட்டங்கள், கொள்கைகள் பற்றிய விழிப்புணர்வை அளித்தல்
  • பெண்கள், SC, ST நலிந்த பிரிவினருக்கான கல்வியின் மீது சிறப்பு கவனம் செலுத்தியது.

கிராமப்புற செயல்பாட்டு கல்வித்திட்டம் – 1986:

  • இது தேசிய வயது விந்தோர்க்கான கல்வி திட்டத்தின் துணைத்திட்டம்
  • மத்திய அரசு 100% நிதி அளித்தது
  • பயிற்சி பெறுபவர்களுக்கு படித்தல் (ம) எழுதுவதற்கான திறமைகளை மேம்படுத்தியது.
  • பல்வேறு சமூக பொருளாதார திட்டங்களின் பயன்களை ஒருங்கே வழங்கியது.

கொள்கை முறை:

  • ஒவ்வொரு வரும் ஒவ்வொருவரை
  • கல்லூரி (ம) பல்கலைக்கழகத்தில் உள்ள தன்னார்வ மாணவர்களை ஈடுபடுத்துவது
  • திட்டமானது பயிற்சியாளர்களின் தேவை (ம) மொழியினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
  • 15 – 35 வயதுவரை உள்ளவர்களில் கல்வி அறிவு அற்றவர்களை அடையாளம் காண்பது
  • அனைத்து வகையான துறைகள் (ம) நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
  • கல்வி அறிவு பெற்றவர்களுக்கு பிந்தைய நடவடிக்கைகளுக்கு தேவையானவற்றை வழங்குவது

தேசிய கல்வி இயக்கம் – 1988:

2007 க்குள் 75% எழுத்தறிவு நிலையை எட்ட, 15 – 35 வயதினருக்கு செயலறிவுக்கல் வழங்குதல்

முழுக் கல்வியறிவு இயக்கம்

சக்சார் பாரத் – 2009

தேசிய கல்வி எழுத்தறிவு இயக்கம்:

தேசிய கல்வி இயக்கம் – 1988:

  1. 15 – 35 வயது வரை உள்ள கல்வி அறிவற்றவர்களுக்கு செயல்பாட்டு கல்வியை வழங்குவதற்கான, ஒரு தொழில்நுட்ப இயக்கமாகும்.
  2. தேசிய கல்வி கொள்கையில், கல்வி அறிவின்மையை நீக்கும் கருவிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.
  3. 1980 ல் நடைபெற்ற எர்ணா குளம் கல்வி பிரச்சாரம் இந்த இயக்கத்தின் நடைமுறை வழிமுறையை கொடுத்தது.
  4. இது குடும்ப நலம், நோய் தடுப்பு, தாய் – சேய் நலம், சுற்றுச்சூழல் போன்ற அறிவைத் தந்தது.

நோக்கம்:

  1. 15 – 35 வயது வரை உள்ள குழுவில் 80 மில்லியன் படிப்பறிவற்றவர்களுக்கு செயல்பாட்டு கல்வியை அளித்தல்
  2. 1990 க்குள் 30 மில்லியன் மக்களுக்கும், 1995-க்குள் 50 மில்லியன் மக்களுக்கும் கல்வி அளித்தல்
  3. நீடித்த கல்வி வளர்ச்சி விகிதத்தை 75மூ அடைவது
  4. முறைசாரா கல்வி திட்டங்கள் செயல்படுத்தப்படாத இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி வழங்குதல்
  5. SC / ST பெண்கள், பின்தங்கிய வகுப்பினருக்கு முக்கியத்துவம் அளித்தல்
  6. கல்வி அறிவிற்கு பிந்தைய நடவடிக்கைகளில் கவனம் செலுத்துதல்

முழுக்கல்வியறிவு இயக்கம்:

  1. தேசியக் கல்வியறிவு இயக்கத்தில் கல்வியறிவின்மையை களைவதற்கான ஒரு முக்கிய திட்டம்
  2. காலவரம்பு 12 – 18 மாதங்கள்
  3. இது குறிப்பிட்ட இலக்குகள் சார்ந்தது
  4. மக்கள் பங்கெடுப்புடன் கூடியது
  5. தன்னார்வ அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படுவது

முக்கிய நடவடிக்கைகள்:

  1. அனைவரையும் பள்ளிகளில் இணைத்தல் (ம) தக்க வைத்தல்
  2. நோய் தடுப்பு முறைகள்
  3. சுற்றுச்சூழல் பாதுகாப்பு
  4. சிறிய குடும்பத்தின் நன்மைகளை எடுத்துரைப்பது
  5. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது

மேலாண்மை அமைப்புகள்:

  1. மாவட்ட / கிராம அளவில் தேர்வு செய்யப்பட்ட குழு
  2. திட்டம் சார்ந்த துணைக்குழுக்கள்
  3. மாவட்ட / வட்ட அளவிலான நிர்வாகம்
  4. இந்த இயக்கம் மாவட்ட ஆட்சியாளர்களை தலைமையாக கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பெண்கல்விக்கு தேசிய கல்வி இயக்கத்தின் பங்கு:

  1. பெண்களுக்கு தேவைப்படும் தகவல் சார் அறிவு (ம) அதிகாரம் பெறுவது ஆகியவற்றை தாங்களாகவே நிறைவு செய்து கொள்ளும் சூழலை உருவாக்குவது
  2. தேசியக் கல்வி இயக்கம் – 1988
  3. முழுக்கல்வியறிவு இயக்கம்
  4. கல்வியறிவிற்கு பிந்தைய திட்டங்கள்
  5. பெண்களுக்கு குழுக்கள் முயற்சிகள் மேல் உள்ள நம்பிக்கையை கற்பித்தல்
  6. பெண்களுக்கு கல்வியறிவு அளிப்பதே, அவர்களுக்கு எதிரான கொடுமைகளை களைவதற்கான முதல்நிலை என்ற சூழலை உருவாக்குதல்

பெண்கல்வியை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள்:

  1. சமூக விழிப்புணர்வு
  2. பள்ளிக் கூடங்களில் சேர்க்கை
  3. தன்னம்பிக்கை (ம) ஆளுமைதிறன் அதிகாரம் அளித்தல்
  4. பெண் தொழில் முனைவோர் உருவாக்குதல்
  5. சிறுசேமிப்பு (ம) கடன் வசதிகளுக்கான வழிவகைகள்
  6. உடல் நலம் (ம) தூய்மை
Scroll to Top