2.வேலைவாய்ப்பின்மை பிரச்சனைகள்

வேலையின்மை மற்றும் வகைகள்:

வேலையின்மை:

  1. வேலையின்மை என்பது ஒருவர் வேலை செய்ய விருப்பமும். தகுதியும் இருந்தும் வேலை கிடைக்காத நிலையாகும்.
  2. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் வேலையின்மை (9.6%)
  3. வகைகள்:
  4. இவ்வகை வேலையின்மை தேவையான வேலைவாய்ப்பினை உருவாக்கத் தேவைப்படும் உற்பத்தித்திறன் இன்மையால் ஏற்படுகிறது.
  5. இது வேகமாக வளரும் மக்கள்தொகைக்கு ஏற்ப ஏற்படுகிறது.
  6. இவ்வகை வேலையின்மை நீண்டகாலம் நீடிப்பவை.
  7. இந்திய வேலையின்மை அடிப்படையில் இவ்வகையைச் சார்ந்துள்ளது.
  8. குறைவான வேலையின்மை:
  9. வேலையாட்கள் தங்களது திறமை (ம) தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பினை பெறாதது.
  10. அவர்கள் ஏதாவது ஒருபணி செய்து, உற்பத்தித்திறன் குறிப்பிட்ட அளவில் இருப்பது
  11. ஒரு நாடு தனது பணியாட்களை சரியாக பயன்படுத்த தவறினால், இவ்வகை வேலைவாய்ப்பின்மை தோன்றும்.
  • வெளிப்படை வேலையின்மை
  1. வேலையாட்களுக்கு எவ்வித பணியுமின்றி இருப்பது, அத்துடன் பணிக்கான காலியிடம் இல்லாமல் இருப்பது, இவ்வகை வேலைவாய்ப்பின்மையால் ஏற்படுகிறது.
  2. படித்த வேலைவாய்ப்பற்றவர்கள் (ம) படிக்காத வேலையாட்கள் ஆகியோரும் இவ்வகையில் வருகிறார்கள்.
  3. வேலைதேடி கிராமப் புறங்களிலிருந்து நகரத்திற்கு வருவது இந்தியாவில் நடைபெறுகிறது. இது இவ்வகை வேலைவாய்ப்பின்மைக்கு உதாரணமாகும்.
  4. மறைவான வேலைவாய்ப்பின்மை
  5. ஒரு பணியாள் உற்பத்தியில் எவ்வகையிலும் பங்கு பெறாதது அல்லது
  6. அவரை பணியிலிருந்து நீக்கினாலும் உற்பத்தித்திறன் பாதிக்கப்படாத நிலை மறைமுக வேலைவாய்ப்பின்மையாகும்.
  7. அப்படிப்பட்ட வேலையில்லா நபரின் உற்பத்தித்திறன் பூஜ்ஜியம்
  8. விவசாயப் பிரிவு வளர்ந்து கொண்டிருக்கும் (ம) வளர்ந்த பொருளாதாரங்கள் இவ்வகை வேலைவாய்ப்பின்மையில்வரும்.

 

  1. உராய்வு வேலையின்மை
  2. தேவை (ம) அளிப்பில் மாறுபாடு ஏற்படுவதால் இவ்வகை வேலைவாய்ப்பின்மை ஏற்படும்.
  3. இந்தியாவின் முக்கியத்தொழில் விவசாயம்
  4. இதன் உற்பத்தித்திறன் காலநிலையைப் பொறுத்தது
  5. இதன் தேவையும் கிடைக்கும் வளங்களைப் பொறுத்தது
  6. தேவை (அ) வழங்கலில் மாற்றம் ஏற்பட்டால், இரண்டின் சமநிலையும் பாதிக்கப்படும்.
  7. பருவ வேலைவாய்ப்பின்மை
  8. மாறுபாடுகளைப் பொறுத்து தேவை குறையும் போது, இவ்வகை வேலைவாய்ப்பின்மை ஏற்படும்.
  9. பணியாளர்கள் வருடம் முழுவதும் வேலை பெறாதது
  10. விவசாயப்பணி நடைபெறும்போது மட்டும் வேலைவாய்ப்பு பெறுவது
  11. இந்திய விவசாயம் 7 – 8 மாத வேலைவாய்ப்பை வழங்குகிறது.
  12. மீதமுள்ள நாட்களில் வேலையில்லாமல் இருத்தல்

வேலையின்மைக்கான காரணங்கள்:

  1. மக்கள்தொகைப் பெருக்கம்
  2. இந்தியாவில் வேலையின்மை சிச்கலுக்கு முதன்மைக் காரணம் மக்கள்தொகைப் பெருக்கம்
  3. வேலைசெய்கின்றவர்களின் எண்ணிக்கை கூடுகின்ற அளவுக்கேற்ப வேலை வாய்ப்புகளை நமது ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் உருவாக்க இயலவில்லை.
  4. இதனால் கூடுகின்ற மனிதர்கள், நாட்டிற்கு வளமாக இல்லாமல் சுமையாக மாறிவருகின்றனர்.
  5. வளர்ச்சி பெறாத வேளாண்மை
  6. நமது வேளாண்மைத்துறை வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு விரைந்து முன்னேறவில்லை.
  7. உழைப்புச் செறிவுள்ள இத்துறையில் எதிர்பார்த்த புரட்சி நடைபெறவில்லை
  8. இதனால் மறைமுக வேலையின்மை இத்துறையில் தொடர்கிறது.
  9. வளர்ச்சி குறைந்த பொருளாதாரம்
  10. இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதம் குறைவாக இருக்கின்றது.
  11. நமது நாட்டிலுள்ள மூலவளங்களை இன்னும் முழுமையாகவும் சரியாகவும் பயன்படுத்தவில்லை.
  12. இதனால் போதுமான அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை.
  13. குறைவான தொழில்களின் வளர்ச்சி
  14. நமது நாட்டில் மூலதனப் பற்றாக்குறை (ம) சட்டநடைமுறைகளால் பெரிய தொழில்கள் வேகமாக வளரவில்லை.
  15. வேலைவாய்ப்புள்ள சிறிய தொழில்களைப் பரவலாக நாடெங்கும் வளர்க்கத் தவறிவிட்டோம்.
  16. வேலைவாய்ப்புக்கான திட்டமின்மை
  17. நமது ஐந்தாண்டுத் திட்டங்களில் வேலை வாய்ப்புகளைப் பெருக்க சரியாகத் திட்டமிடவில்லை.
  18. மனிதவளத் திட்டமிடல் இன்னும் கருத்தளவிலேயே உள்ளது.
  19. இருக்கின்ற மக்களின் தரத்தை ஒட்டி வேலை வாய்ப்பைப் பெருக்க திட்டம் இல்லாததால், சரியான முயற்சியும் இல்லை.
  20. ஆக்கத்திறனற்ற கல்விமுறை
  21. தற்போதைய கல்விமுறை கல்விகற்றவர்களையும் பட்டதாரிகளையும் மட்டுமே உருவாக்குகிறது.
  22. அவர்களிடம் தொழில்நடத்தும் ஆக்கத்திறனையே தன்னம்பிக்கையையோ வளர்க்கத் தவறிவிட்டது.
  23. இதனால் கற்றவர்கள் மற்றவர்களைச் சார்ந்து வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
  24. இதனால் கற்றோர் வேலையின்மை உருவாகிறது.
  25. தொழில் முனைவோர் இன்மை
  26. நமது நாட்டில் போதுமான அளவில் தொழில்முனைவோர் இல்லை.
  27. சுயதொழில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பின், அவர்கள் தங்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கி, மற்றவர்களுக்கும் வேலையளிக்க முடியும்.
  28. எந்திரமயமாக்குதல்

சில துறைகளில் எந்திரமயமாக்கல் போக்கு வளர்ந்து வருகின்றது. இதனால் வேலைவாய்ப்புக்குறைகிறது.

 

வேலையின்மைக்கான காரணங்கள்:

  1. சமூக காரணங்கள்
  2. சமூக நிலை
  3. மக்கள்தொகைப் பெருக்கம்
  4. கல்விமுறையில் குறைபாடு
  5. பொருளாதார காரண்கள்
  6. குறைவான மூலதனம்
  7. தொழில்களின் அமைவிட மாற்றம்
  8. சந்தைப் போக்கினை முன்கூட்டியே கணிக்கும் திறன் இன்மை
  9. பொருளாதாரப் போட்டிகள்
  10. பொருளாதாரச் சரிவுகள்
  11. தொழிற்சாலை இயந்திரங்களின் பயன்பாடு அதிகரிப்பு
  12. அதிக உற்பத்தி
  13. தேவை ― அளித்தல் இடையிலான வேறுபாடு
  14. சேமிப்பு அதிகரித்தல்
  15. பணவீக்கம்
  16. விலைச்சரிவு
  17. வேலையின்மைக்கான தனிப்பட்ட காரணங்கள்:
  18. அனுபவமின்மை
  19. தொழில் திறமைகள் குறைவு
  20. நோய் வாய்ப்படுதல்
  21. பலவீனம்
  22. உயர்வான அந்தஸ்து எதிர்பார்த்தல்
  23. அரசு வேலைகளை மட்டும் நம்புதல்
  24. ஆராய்ச்சி படிப்பு குறைவான ஊக்கத்தொகை
  25. போட்டித் தேர்வுக்கு தயாராதல்
  26. வேலைவாய்ப்பின்றி சார்ந்து வாழ்தல்
  27. வேலைவாய்ப்பு பற்றிய சரியான தகவல் இன்மை
  28. வேலைக்கு பிற இடத்திற்கு செல்ல மறுத்தல்
  29. மொழி பிரச்சனை
  30. குடும்ப பொறுப்பின்மை
  31. தொழிற்கல்வி பயிற்சி இன்மை

 

இந்தியா (ம) தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பின்மை:

இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை:

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 ன் படி,

  1. 2001-வேலைவாய்ப்பின்மை 6.8% 2011-வேலைவாய்ப்பின்மை 9.6% ஆக உயர்வு
  2. 10 மில்லியன் இளநிலை, முதுநிலை, தொழில்நுட்ப பட்டதாரிகள் வேலைத்தேடிக் கொண்டிருக்கின்றனர்.
  3. மொத்த இந்தியர்களில் 15% படித்தவர்கள் வேலைவாய்ப்பு தேடிக்கொண்டு இருக்கின்றனர்.
  4. படித்தோர் -படிக்காதோர்
  5. ஆண் – பெண்
  6. கிராமம் – நகரம்
  7. முறைசார் – முறைசாராதுறை
  8. கல்விகற்றோர் வேலையின்மை
  9. துறை – 1, 2, 3
  10. ரளாவில் 30% மேற்பட்ட படித்த பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இன்றி இருக்கின்றனர்.
  11. வேலைவாய்ப்பு தேடும் மொத்த இந்தியர்கள் – 116 மில்லியன்
  12. இதில் படித்தவர்கள் – 84 மில்லியன்
  13. படிக்காதவர்கள் 32 மில்லியன்
  14. வேலைவாய்ப்பின்மை படிக்காதவர்களைவிட, படித்தவர்களிடையே வேகமாக வளருகிறது.
  15. நகரங்களைவிட கிராமங்களிலேயே அதிக வேலைவாய்ப்பின்மைக் காணப்படுகிறது.
  16. வேலைவாய்ப்பின்மை ஆண்களை விட பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது.
  17. வேலை வாய்ப்பின்மை அதிகம் காணப்படும் துறை : முதன்மைத்துறை 7 இரண்டாம் நிலைதுறை 7 சார்புத்துறை
  18. மற்றதுறைகளைவிட வேளாண்மைத்துறையில் அதிக வேலைவாய்ப்பின்மை காணப்படுகிறது.
  19. வேலைவாய்ப்பு வளர்ச்சி ஆண்டிற்கு 2% மட்டுமே இருக்கிறது.
  20. கல்வி கற்று வேலைவாய்ப்பில்லாமல் இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  21. ஒழுங்கற்ற அமைப்பு பிரிவுகளில் சமீபகாலமாக வேலைவாய்ப்பு வளர்ச்சிவீதம் அதிகரித்துள்ளது.

 

தமிழ்நாட்டின் வேலை வாய்ப்பின்மை:

  1. தமிழ்நாட்டில் விவசாயமே அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது.
  2. விவசாயமல்லாத துறைகள், உழைப்பாளர்கள் குழு தொழில்களை மாற்றிக் கொள்வதற்குப் போதுமான வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.
  3. தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு வளர்ச்சியின் பெரும்பகுதி குறைந்த வருமானங்களை அளிக்கின்ற அமைப்பு ரீதியாக, ஒழுங்கமைக்கப்படாத முறைசாரா துறைகளின் பங்களிப்பாகும்.
  4. ஐந்தாண்டு திட்டங்களில் வேலைவாய்ப்புக் கொள்கை
  5. 7வது ஐந்தாண்டுத் திட்டம் 1985 – 1990

பொதுவான நிலை அடிப்படையில், வேலைவாய்ப்பு வளர்ச்சி வீதத்தை அதிகரித்தல்.

  1. 8வது ஐந்தாண்டுத்திட்டம் : 1992 1997:
  2. 2000 ஆண்டிற்குள் ஆண்டுக்கு 2% வேலைவாய்ப்பை உருவாக்குதல்.
  3. இதன் பொருட்டு பல்வேறு வேலைவாய்ப்புத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
  4. 9வது ஐந்தாண்டுத்திட்டம் : 1997 2002;
  5. வேளாண்மையில் பொதுமுதலீடுகளை ஈர்த்தல்.
  6. இதன்மூலம் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.
  7. 10வது ஐந்தாண்டுத் திட்டம்: 2002 – 2007:
  8. ஆண்டிற்கு 10 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.
  9. 8% உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை அடைதல்.
  10. வேலைவாய்ப்பு திட்டங்கள் மூலம் மறைமுக உருவாக்குதல்.
  11. 11வது ஐந்தாண்டுத்திட்டம்: 2007 – 2012
  12. நகர்ப்பற (ம) கிராமப்புற வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.
  13. வளர்ச்சி குறைவான பகுதிகள், துறைகளில் வேலைவாய்ப்பினை அதிகரித்தல்.
  14. நகர்ப்புற ஏழைகளுக்கு வேலை காப்பீட்டை விரிவுபடுத்துதல்.
  15. 12வது ஐந்தாண்டுத்திட்டம்; 2012 – 2017
  16. உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பினை அதிகரிப்படுத்துதல்.
  17. மேலும் 10 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குதல்.

வேலையின்மையால் ஏற்படும் விளைவுகளை:

  1. வேலையின்மையால் குடும்பத்தில ஏற்படும் விளைவுகள்:
  2. குடும்பத்தின் ஒற்றுமை பாதிக்கப்படுகிறது.
  3. தனிப்பட்ட மனிதனின் குறிக்கோள் (ம) நோக்கம் பாதிக்கப்படுகிறது.
  4. கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்படுகிறது.
  5. குடும்பத்திற்குள் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது.
  6. கணவன் வேலைக்கு செல்லாமல், மனைவி மட்டும் வேலைக்கு செல்லும் குடும்பத்தில், கணவனின் மனதில் எரிச்சலை உண்டாக்குகிறது.
  7. வேலைக்கு செல்லாத மகன் (அ) மகளால் பெற்றோர் பிள்ளைகள் இடையே தகராறு ஏற்படுகிறது.
  8. வேலையின்மையால் சமூகத்தில் ஏற்படும் விளைவுகள்:
  9. வேலையின்மையால் சமூக உறவுகள் பாதிப்படையும்
  10. வேலையின்மையால் இளைஞர்கள் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவர்.
  11. சமூக விரோதச் செயல்கள் – கொள்ளை, வழிப்பறி, வங்கிக் கொள்ளை
  12. மனஉளைச்சல் (ம) தற்கொலை எண்ணத்தை தூண்டுகிறது.
  13. கடத்தல், போதைப்பொருள் விற்றலில் ஈடுபடுவர்
  14. வேலையின்மையால் குறைவான ஊதியம் பெறும் நிலைக்குத் தள்ளப்படுவர்
  15. வறுமை அதிகரிக்கும்.
  16. தனிநபர்கள் உழைப்பதற்கான விருப்பத்தையே இழந்துவிடுவர்
  17. தனிநபரின் திறன்கள் வீணடையும்
  18. கடன்கள் அதிகரிக்கும்
  19. பட்டினியால் பலர் இறப்பர்
  20. வேலையில்லாதவர்களின் பொருளாதார நிலை பாதிப்படையும்
  21. மது (ம) போதை பழக்கத்திற்கு ஆளாவர்.

பகவதி குழு 1970:

நோக்கம்:

இந்திய அரசு, வேலையின்மையின் அளவை மதிப்பிட்டு, அதனைத் தீர்க்க வழிமுறைகள் அமைக்க பகவதி குழு உருவாக்கப்பட்டது.

பரிந்துரைகள்:

  1. வேலைவாய்ப்பு, மனித வளத் திட்டமிடுதல் ஆகியவற்றிற்காக ஒரு தேசியக்குழுவை உருவாக்க வேண்டும்.
  2. நாட்டின் வளர்ச்சிக்குரிய வளங்களில் ஒரு பகுதியை ஒதுக்கியும், கூடுதல் வரிவிதித்தும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
  3. பெரிய அளவில் கிராம வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
  4. உழைப்புச் செறிவுடைய தொழில்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
  5. குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வேலை செய்வதை தடுக்க வேண்டும்.
  6. வாரம் 48 மணிநேரமாக இருக்கும் உழைப்பினளவை 41 மணி நேரமாகக் குறைக்க வேண்டும்.
  7. வேலைவாய்ப்புக் கல்வி முனையை உருவாக்க வேண்டும்
  8. வேலைவாய்ப்புக் காப்பீடு திட்டத்தை கொண்டுவர வேண்டும்.
  9. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த சரியான திட்டம் அவசியம்.
  10. பின்தங்கிய வட்டாரங்களுக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும்.

 

எஸ்.பி. குப்தா குழு – 2001:

10 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வழிமுறைகளை ஆராய் அமைக்கப்பட்டது.

 

கிராமப்புற வேலையின்மை:

ஊரக வேலையின்மை:

  1. ஊரக வேலையின்மை – 7.8%
  2. நடைமுறையிலுள்ள ஊதிய விகிதத்தில், தனிநபரால் வேலை செய்ய விருப்பம் இருந்து கிடைக்கப்பெறாத நிலை

வகைகள்:

  1. வெளிப்படை வேலையின்மை
  2. மறைமுக வேலையின்மை
  3. பருவகால வேலையின்மை

காரணங்கள்:

  1. திறன் மேம்பாட்டு பயிற்சி (ம) வேலைவாய்ப்பு பயிற்சி உருவாக்கம் இன்மை அரசால் போதிய பயிற்சிகள் (ம) வேலைவாய்ப்பை உருவாக்க இயலவில்லை.
  2. வேளாண்மை பருவகாலம் சார்ந்தது

இயற்கை (ம) பருவமழை பொய்ப்பின் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும்

துணை தொழில்கள் இன்மை

  1. போதிய நிதி (ம) அங்காடி வசதிகள் இன்மை
  2. ஊரக மக்கள் கோழி வளர்ப்பு, கயிறு திரித்தல், பன்றி வளர்த்தல் என துணைத்தொழில்களில் ஈடுபட முடியவில்லை.

வேளாண்மையை இயந்திரமயமாக்குதல்:

உழுதல், நீர்ப்பாசனம், அறுவடை செய்தல், கதிரடித்தல் என இயந்திர பயன்பாடு வேலைவாய்ப்பை குறைக்கிறது.

மூலதன செறிவு தொழில் நுட்பம்:

நகர்ப்புறங்களில் மட்டுமே தனியார் தொழில்துறை முதலீடு செய்கிறது.

கல்வி முறையில் உள்ள குறைபாடுகள்:

  1. அதிக கல்வி நிறுவனங்கள் (ம) அதிக பட்டதாரிகள்
  2. ஆனால் தமது திறமைகளை வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை

தீர்வுகள்:

  1. துணை தொழில்கள்
  2. துணைத்தொழில் துவங்க ஊக்கம், கடன்வசதி அளித்தல்
  3. பண்டங்களை சந்தைப்படுத்துதல்
  4. ஊரக வேலைத்திட்டம்
  5. சாலைவசதி, வடிகால்கள், கால்வாய்களை தோண்டும் பணிகள் செய்தல்
  6. வேலையற்றவர்களுக்கு ஆக்கப்பூர்வ வேலைவாய்ப்புகளை வழங்குதல்
  7. நீர்ப்பாசன வசதிகள்
  8. பலவகை பயிர்கள் பயிரிடல்
  9. தீவிர பயிர்சாகுபடி முறை பின்பற்றல்
  10. ஊரக தொழில்மயமாக்கல்

புதிய தொழிற்சாலைகளை அமைக்க அரசு ஈடுபடல்.

  1. தொழில் நுட்பகல்வி:

சுயதொழில் துவங்க வழிவகை செய்தல்.

கல்வி கற்றோர் வேலையின்மை:

  1. கல்வி கற்றும் வேலையில்லாமல் இருப்பது
  2. படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையின்மை
  3. குறைவான ஊதியத்தில், குறை தகுதியில் வேலை செய்ய விருப்பம் இல்லாமல் இருத்தல்

காரணங்கள்:

  1. கல்விமுறை வாழ்க்கைக்குத் தொடர்பில்லாமல் இருக்கிறது.
  2. கல்வி முறையானது மக்கள் தொகையில், ஒரு சிறிய பிரிவினருக்கு மட்டுமே அளிக்கப்படக்கூடிய உயர்கல்விக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
  3. அதிக கல்வி நிறுவனங்கள் (ம) அதிகம் படித்தேன்.
  4. நாட்டின் முன்னேற்றத்திற்கும் கல்வி முறைக்கும் இடையே அதிக இடைவெளி உள்ளது.
  5. ஆசிரியர்களுக்கும் தங்களது துறைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த போதிய அறிவு வேண்டும்.
  6. சில ஆசிரியர்கள் குழந்தைகளின் கல்வியில் அக்கறையற்றும், பகுதிநேர தொழில் புரிந்து வருவாய் ஈட்டியும் வருகின்றனர்.
  7. தொழில்நுட்ப அறிவின்மை
  8. அரசு வேலைகளை மட்டும் நம்புவது
  9. தொழில்கல்விக்கு முக்கியத்துவம் தராமை

வேலைவாய்ப்புத் திட்டம் – மதிப்பீடு (அ) குறைபாடுகள் திட்ட தோல்விக்கான காரணங்கள்:

  1. திட்டத்திற்கு போதுமான அளவு நிதி அளிக்கப்படவில்லை.
  2. மொத்த நிதியில் ஒரு குறிப்பிடத்தக்க அளவானது பிறதிட்டங்களுக்கு திருப்பி விடப்பட்டது.
  3. கார்கள், குளிர்ச்சாதனபெட்டி, வீடியோ புகைப்படக்கருவி என பொருட்கள் வாங்கவும், காலவைப்புகள் (ம) தேசிய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யவம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  4. RLEGP திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்பட வேண்டிய உணவு தானியங்கள் பொது விநியோக நிறுவனம், பிற அமைப்புகளுக்கு சென்றுள்ளது.
  5. வேலைநாட்கள் கணக்கிடப்பட்டதில் தவறான முறை பின்பற்றப்பட்டுள்ளதாக CAG அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  6. பல மாநிலங்கள் ஊதியத்திற்கான செலவினத்தை குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதிய விகிதத்தால் வகுப்பதன் மூலம் கிடைக்கும். ஒரு அனுமான அடிப்படையில் வேலைநாட்களை கணக்கிட்டுள்ளன.
  7. இந்தியாவில் வறுமை 21.9மூ ஆக உள்ளது.
  8. உணவு தானிய உற்பத்திக்கே முக்கியத்துவம் தரப்பட்டு உள்ளது. இதனால் பயிரிடப்படும் நிலத்தின் அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
  9. உணவு தானியங்கள் மறைமுகமாக விற்கப்படுதல் (ம) கடத்தப்படுதல்
  10. கிராமப்புற மக்களுக்கான மாற்று வேலைவாய்ப்பு ஆதாரங்களை உருவாக்க வில்லை.
  11. கிராமப்புறங்களில் தொழில்துறை கட்டமைப்புகளை உருவாக்கவில்லை.
  12. கற்றோர் வேலையின்மை அதிகம்
  13. வேலையற்றோர்க்கு வங்கிகள் மூலம் கடனுதவி அளித்து அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கத் தவறிவிட்டன.
  14. மத்திய அரசால் வழங்கப்படும் மானியத்தின் அளவு குறைந்து வருகிறது.
  15. திட்டத்தை சரியான முறையில் மேற்பார்வை (ம) நிர்வாகிக்கவில்லை.

வேலையின்மையை நீக்குவதற்கான வழிமுறைகளை:

வழிமுறைகள்:

  1. மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புத் திட்டங்கள்
  2. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள்
  3. NGO வின் பங்கு
  4. சுயவேலைவாய்ப்பை ஊக்குவித்தல்
  5. தொழில்கல்வி பயிற்சித்திட்டங்களை ஒழுங்குபடுத்துதல்
  6. நவீன முறையில் பாடத்திட்டங்களை வகுத்தல்
  7. சிறுதொழில் நிறுவனங்களை கிராமங்களில் கொண்டு வருதல்.
  8. உயர்கல்வியில் ஒழுங்குமுறை
  9. வேலைவாய்ப்பு திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்குதல்
  10. தொழிலாளர் சட்டங்களில் திருத்தம்
  11. கடுமையான சட்டதிட்டங்கள் உருவாக்கம்
  12. தடையில்லா வாணிபக் கொள்கை
  13. இந்தியா தனது சொந்த வளம் (ம) ஆதாரங்களை பயன்படுத்துதல்
  14. வளர்ச்சித் திட்டங்களுக்கு குறைவான வட்டி விகிதத்தில் கடன் அளித்தல்
  15. அதிக முதலீடு
  16. நீண்ட நாட்கள் உழைக்கக்கூடிய சொத்துக்களை உருவாக்குதல்
  17. தேர்வு செய்யப்பட்டத்துறைகளில் சில கூட்டுத்திட்டங்களை துவங்குதல்
  18. தொழில் முனைவோரை உருவாக்குதல்

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்:

  1. தோற்றம் – 1978
  2. வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு உதவ (ம) அவர்கள் போலி முகவர்களிடம் ஏமாறாமல் தடுக்க இந்நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.
  3. இந்திய பணியாளர்களுக்கு வெளிநாடுகளில் வேலை கிடைப்பதை ஊக்குவிக்கிறது.

நோக்கங்கள்:

  1. இந்தியப் பணியாளர்களை வெளிநாட்டு வேலைக்கு தேர்வு செய்யும் ஆள்சேர்ப்பு முகவராகச் செயல்படுதல்
  2. தாமாகவோ (அ) அரசின் சார்பாகவோ வெளிநாடுகளில் கூட்டு தொழில்துறைச் சார்ந்த முயற்சிகளை முன்னெடுத்தல்
  3. இந்தியாவில் உள்ள திட்டங்களுக்கு வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களிடம் இருந்து தேவையான நிதிஆதாரங்களை திரட்டுதல்
  4. பாரம்பரியம் (ம) பாரம்பரியம் சாராத பொருட்களின் ஏற்றுமதியை தீவரப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்
  5. வான்வழிபயணம் (அ) போக்குவரத்து போன்ற சேவைகளை வழங்கும் அனைத்து வெளிநாட்டு நிறுவனங்களின் சார்பாக பயணச்சீட்டுகளை விற்பசைன் செய்தல்
  6. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு விபத்து (ம) சுகாதார காப்பீடுகளை வழங்குதல்
  7. வெளிநாட்டு வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு வெளிநாட்டு நாணயங்களை வழங்குதல்

குறிக்கோள்கள்:

  1. தகுதியான, அனுபவமான, அர்ப்பணிப்புள்ள மனிதவளத்தினை கண்டறிதல்
  2. உள்நாட்டு வேலையளிப்போருக்கு தேவைப்படும் மனித வளத்தினை அளித்தல்
  3. வெளிநாட்டு வேலையளிப்போரை ஒரே புள்ளியில் இணைத்தல்
  4. சான்றிதழ்கள் மிக உரிய அதிகார அமைப்புகளிடம் இருந்து சான்றோப்பம் பெற்றுத் தருதல்
  5. பயிற்சிக்கான வசதிகளை செய்து தருதல்
  6. பயணச்சீட்டு வசதிகளை ஏற்படுத்தி தருதல்

 

Scroll to Top