1.மக்கள் தொகைப்பெருக்கம்

மக்கள் தொகையை தீர்மானிக்கம் காரணிகள்:

காரணிகள்:

பிறப்பு விகிதம்:

  1. ஒரு வருடத்தில் 1000 நபர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை வீதம்
  2. மக்கள் தொகை பெருக்கத்திற்கு அதிக பிறப்பு வீதம் முக்கிய காரணியாகும்
  3. 2011 கணக்கெடுப்பின்படி, பிறப்பு வீதம் 21.8/1000

பிறப்பு வீதத்துடன் தொர்புடைய காரணிகள்:

  1. திருமண வயது (3/5) 21 வயதுக்குள் திருமணம்
  2. குழந்தை பிறப்பு அதிகரிப்பு
  3. சமூக பழக்கங்கள் (ம) நம்பிக்கைகள்
  4. படிப்பறிவின்மை
  5. பிறப்பு கட்டுப்பாடு முறைகள் பற்றி அறியாமை

இறப்பு விகிதம்:

  1. ஒரு வருடத்தில் 1000 நபர்களில் இறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை விதம்
  2. மக்கள் தொகை பெருக்கத்திற்கு குறைவான இறப்பு வீதம் முக்கிய காரணியாகும்
  3. 2011 கணகெடுப்பின்படி, இறப்பு வீதம் 7.11/1000

இடப்பெயர்ச்சி:

  1. வெளிகுடியேற்றம் மக்கள்தொகை பெருக்கத்தை குறைக்கிறது.
  2. உள்வெளிகுடியேற்றம் மக்கள்தொகை பெருக்கத்தை அதிகரிக்கிறது.

காரணிகள்:

  1. நிலத்தின் குறைந்த விலை
  2. வளர்ச்சி திட்ட பணிகளின் வளர்ச்சி
  3. மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வு
  4. நகரத்திட்டமிடுதலின் குறைபாடு
  5. மக்கள்தொகை பெருக்கம்

மக்கள்தொகை வெடிப்பு காரணங்கள், விளைவுகள்:

  1. மக்கள்தொகை வெடிப்பு

அச்சுறுத்தக் கூடிய, அதிவேகமான மக்கள் தொகையின் வளர்ச்சி வீதமே மக்கள்தொகை வெடிப்பாகும்.

  1. மக்கள்தொகை வெடிப்பிற்கான காரணங்கள்

 அதிக பிறப்புவீதம்

ஆண்டு

பிறப்பு வீதம்

2001

25.8 / 1000

2011

21.8 / 1000

        அதிக பிறப்பு வீதத்தின் காரணமாக மக்கள்தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது.

குறைவான இறப்புவீதம்

ஆண்டு

பிறப்பு வீதம்

2001

8.5 / 1000

2011

7.11/ 1000

 

குறைவான இறப்பு வீதத்தால் மக்கள்தொகை உயர்ந்துள்ளது.

  1. இளவயது திருமணம்
  2. இந்தியாவில் ஆண்களின் திருமணவயது 21, பெண்களின் திருமண வயது 18
  3. இதனால் மகப்பேறு காலம் அதிகரித்து, பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
  4. சமுதாயக் காரணங்கள்
  5. திருமணம் ஒரு இன்றியமையாத சமூகக்கடமை
  6. குடும்பத்திற்கு ஓர் ஆண்குழந்தை என்ற எதிர்பார்ப்பினால் மக்கள் தொகை அதிகரிக்கிறது.
  7. வறுமை
  8. இந்தியாவின் வறுமைநிலை 2011 ன் படி 21.9%
  9. குழந்தைகள் வருமானம் ஈட்டக்கூடிய நிலையில் திகழ்கின்றனர்.
  10. பள்ளிக்குச் செல்லாமல் தொழில்களில் ஈடுபடுகின்றனர்
  11. எனவே வறுமையைச் சமாளிக்க, கூடுதலாக பிறக்கும் குழந்தைகளை வருமானம் ஈட்டித்தரும் சொத்தாக மக்கள் கருதுகின்றனர்.
  12. கல்வியறிவின்மை
  13. இந்திய மக்களில் 26% பேர் கல்வியறிவற்றோர்
  14. மேலும் பெரும்பாலானோர் குறைவான கல்வியறிவு உடையோர்
  15. கல்வியறிவின்மையால் சமூக பழக்க வழக்கம், வறுமை, வேலையின்மை, போன்ற காரணிகள் அதிகரித்து, மக்கள் தொகையை வளர்ச்சி அடைய செய்கிறது.
  16. பிற காரணங்கள்
  17. அமைதியான நிலைமை
  18. மருத்துவ அறிவு வளர்ச்சி
  19. போக்குவரத்து வளர்ச்சி
  20. வேளாண்மை, தொழில்முன்னேற்றம்
  21. தட்பவெப்பநிலை, பொழுதுபோக்கின்மை
  22. அனைவருக்கும் திருமணம் (ம) குழந்தைகள்

 

மக்கள்தொகை வெடிப்பின் விளைவுகள்:

  1. பொருளாதார வளர்ச்சி பாதிப்பு

பொருளாதார வளர்ச்சிக்கு உழைப்பின் அளிப்பு, அதிமாக தேவைப்பட்டாலும் நமது மக்கள் தொகை தொடர்ந்து வளர்வதால் பொருளாதார வளர்ச்சி பாதிப்புள்ளாகிறது.

  1. உணவுப் பற்றாக்குறை

இந்திய மக்கள்தொகை அதிகரிப்பதால், விவசாய உற்பத்தியில் சமவிகித வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனால் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது.

  1. உற்பத்தி செய்யாத நுகர்வோர்சுமை
  2. மக்கள்தொகை அதிகரிக்கும் போது, குழந்தைகள் மற்றும் முதியோரின் எண்ணிக்கையும் உயர்கிறது.
  3. குழந்தைகளும், முதியோர்களும் உற்பத்தியில் ஒரு பங்கினையும் வகிக்காமல் பொருள்களை மட்டுமே நுகர்கின்றார்கள்.
  4. தலா வருமானம் (ம) நாட்டு வருமானம் குறைதல்
  5. அதிவேகமாக வளரும் மக்கள்தொகை தலா வருமானம் (ம) நாட்டு வருமானத்தின் சராசரி வளர்ச்சி வீதத்தை தடை செய்கிறது.
  6. நாட்டு வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்பை நிலையாக வளர்ந்து வரும் மக்கள் தொகை நுகர்ந்து விடுகிறது.
  7. சேமிப்பும் முதலீடும் குறைதல்
  8. அதிவேக மக்கள்தொகை வளர்ச்சி சேமிப்பையும் (ம) முதலீட்டின் திரனையும் குறைக்கிறது.
  9. நாட்டு வருமானம், தலா வருமானம் குறைவாக உள்ளதால் சேமிப்பு பூஜ்ஜியம் ஆகிறது.
  10. இதனால் முதலீடு குறைவதுடன், உற்பத்தித்திறன் பாதிக்கப்படுகிறது.
  11. வேலையின்மை (ம) குறைவேலையுடைமை
  12. வளரும் மக்கள்தொகை வேலையில்லா திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கிறது.
  13. இதனால் நிறைய மக்கள் வேலையில் அமர்த்தப்பட்டாலும், குறைவான வேலையில் அமர்த்தப்பட்டும் இருக்கிறார்கள்
  14. மக்களின் உழைப்பு வீணாதல்
  15. அடிக்கடி குழந்தை பெறுவதால், உற்பத்தி நடவடிக்கைகளில் பெருமளவு மகளிரால் நீண்டகாலத்திற்கு வேலைசெய்ய இயலவில்லை
  16. இதனால் மனிதவளம் வீணாகிறது. பொருளாதார வளர்ச்சிக் குறைகிறது.
  17. உழைப்பின் உற்பத்தித்திறன் குறைவு
  18. மக்கள்தொகைப் பெருக்கம் நாட்டு வருமானம் (ம) தனிநபர் வருமானத்தைப் பாதிக்கிறது.
  19. மக்களின் வாழ்க்கைத்தரம் குறைவதால், உற்பத்தி திறன் குறைகிறது.

 

  1. சமூக நலத்திட்டத்தின் மீது அதிகச் செலவு
  2. மக்கள் தொகை அதிகரிப்பானது, குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன.
  3. இதனால் மருத்துவ பராமரிப்பு, பொது சுகாதாரம், குடும்பநலன், கல்வி, வீட்டுவசதி போன்ற சமூக செலவுகளின் தேவையானது அதிகரிக்கின்றன.

10.வேளாண்மையில் பின்தங்கிய நிலை

  1. மக்கள்தொகை வளர்ச்சியினால் நிலம் துண்டாப்படுகிறது.
  2. நிலங்கள் மிகச்சிறியதாக இருப்பதனால், இயந்திரமயமான உழவு முறையைக் கையாள முடியாது
  3. அரசு மீத நிதிச்சுமை
  4. அதிவேக மக்கள்தொகை அதிகரிப்பு நிதிச்சுமையாக அரசுக்கு அமைகின்றது.
  5. சமூக நலத்திட்டங்களுக்காகவும் வறுமையை அகற்றவும் அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது.
  6. மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டால், அரசு நிதியை உற்பத்திக்காக செலவழிக்கக் கூடும்

12.பிறவிளைவுகள்

  1. வறுமை அதிகரிப்பு
  2. நிலத்தின் மீதான அதிக அழுத்தம்
  3. மந்தமான பொருளாதார வளர்ச்சி
  4. கல்வி பிரச்சனை
  5. வீட்டுவசதி பிரச்சனை
  6. சுற்றுச்சூழல் மாசுபாடு

மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் வழிகள்:

  1. தம்பதிகளின் பாதுகாப்பு வீதம்

இவ்வீதத்தினை அதிகரிப்பதற்கு குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை கையாளும், தம்பதிகளின் விகிதம் அதிகரிக்க வேண்டும்.

  1. குழந்தைகளின் இறப்பு வீதம்

குழந்தைகள் குறைந்த எண்ணிக்கையில் இறக்கும் போது, பொதுமக்கள் சிறுகுடும்ப நெறியினை பின்பற்ற ஊக்கம் ஏற்படும். எனவே இவ்வீதம் குறைக்கப்பட வேண்டும்.

  1. நாடு தொழில் மயமாதல்
  2. நிலத்தை சார்ந்திருக்கும் மக்கள்தொகை அழுத்தத்தை குறைக்க வேண்டும்.
  3. கிராமப் புறங்களில் குடிசை (ம) சிறுதொழில்களை, அதிக பட்ச மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில் வளரச் செய்தல் வேண்டும்.
  4. பெண்களின் எழுத்தறிவு வீதம் (ம) கல்வியை அதிகரித்தல்
  5. கல்வி கற்ற பெண்கள், தங்களுடைய குடும்ப அளவினைப் பற்றி அதிகப் பொறுப்பு வாய்ந்த கண்ணோட்டத்தைப் பெற்றுள்ளனர்.
  6. சிறுகுடும்பத்தின் நன்மைகள் குறித்தும், குடும்ப கட்டுப்பாட்டு முறைகள் பற்றியும் அறிந்து, செயல்படுத்தி குடும்ப அளவைக் குறைக்கின்றனர்.
  7. காலம் தாழ்த்தி திருமணம் செய்தல்
  8. காலம் தாழ்த்தி திருமணம் செய்வதற்கு, ஊக்கமளிக்க வேண்டும்.
  9. முன்கூட்டியே திருமணம் செய்வதை கட்டாயம் கட்டுப்படுத்த வேண்டும்.
  10. சட்டரீதியான நடவடிக்கை

இளவயது திருமணம் (ம) பலதார மணம் நடைபெறுவதை தடுப்பதற்கு கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

  1. அதிக வேலைவாய்ப்பு
  2. வேலைவாய்ப்பு வசதிகளை கிராம (ம) நகர்ப்புறங்களில் அதிகப்படுத்த வேண்டும்.
  3. பொதுவாக கிராமங்களில் மறைமுக வேலையின்மை உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் உள்ள வேலையில்லா மக்களை நகர்புறங்களில் இடம்பெயர செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
  4. வேளாண்மை (ம) தொழில்துறை வளர்ச்சி அடைதல்
  5. வேளாண்மையும் தொழில்துறையும் முறையாக வளர்ச்சி அடைந்தால், அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  6. கிராம புறங்களில் அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் குடிமை (ம) சிறுதொழில் தொழிற்சாலைகள் வளர்ச்சி அடைய வேண்டும்.
  7. வாழ்க்கைத் தரம்
  8. உயர்வான வாழ்க்கைத்தரம் பெருங்குடும்பங்களுக்கு தடையாக அமைகிறது.
  9. மக்கள் தங்களின் வாழ்க்கை தரத்தை பராமரிப்பதற்கு சிறுகுடும்பங்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர்.
  10. நகரமயமாதல்
  11. கிராமப்புறங்களை காட்டிலும் நகர்ப்புறங்களில் பிறப்புவீதம் குறைவாக உள்ளது.
  12. ஆதலால் நகரமயமாதல் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
  13. சுயகட்டுப்பாடு
  14. இம்முறை தனித்துவம் (ம) சுகாதாரமான அணுகுமுறை
  15. பிறப்பு விகிதத்தை குறைக்க இம்முறை உதவுகிறது.
  16. குடும்ப கட்டுப்பாடு
  17. குடும்ப கட்டுப்பாடு என்பது குடும்ப நபர்களின் எண்ணிக்கையை குறைத்தல் ஆகும்.
  18. குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரத்தை தேசிய இயக்கமாக மாற்ற வேண்டும்.
  19. பொழுதுபோக்கு வசதிகள்

திரைப்படம், திரையரங்குகள், விளையாட்டு, நடனம் போன்ற பொழுதுபோக்கு வசதிகள் செய்து தரப்பட்டால், பிறப்புவிகிதம் குறைய வாய்ப்புள்ளது.

14.விளம்பரம்

தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள், போன்ற தகவல்தொடர்பு ஊடகங்களின் மூலம் திட்டமிட்ட குடும்பங்களால் பெரும் நன்மையை மக்களுக்கு தெரிவிக்கலாம்.

  1. ஊக்கத்தொகை

பிறப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கையை மக்கள் பின்பற்ற, அரசானது ஊக்கத்தொகை போன்ற வழிகளை பின்பற்றலாம்.

  1. பெண்களுக்கு வேலைவாய்ப்பு
  2. பெண்களுக்கு பலதுறைகளில் வேலைவாய்ப்பு (ம) ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
  3. போட்டித் தேர்வுகளில் பெண்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்த வேண்டும்.

நிலையான மக்கள்தொகையை அடைவதற்கான வழிமுறைகள்:

  1. குழந்தை சுகாதார சேவை (ம) சுகாதார கட்டமைப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.
  2. 14 வயது வரை இலவசக் கல்வி
  3. குழந்தைகளின் இறப்புவிகிதத்தை 30 க்கு கீழே கொண்டு வர வேண்டும்.
  4. பிரசவத்தின் போது, தாயின் இறப்பை கட்டுப்படுத்த வேண்டும்.
  5. குழந்தைககளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி போட வேண்டும்.
  6. திருமண வயது 20 (ம) அதற்கு மேல் அதிகரிக்க வேண்டும்.
  7. பிறப்பு, இறப்பு, திருமணம் ஆகியவற்றை 100% பதிவு செய்ய வேண்டும்.
  8. எய்ட்ஸ் போன்ற தொற்றுநோயை தடுக்க வேண்டும்.
  9. சிறுகுடும்ப செயல்திட்டத்தினை ஊக்குவிக்க வேண்டும்
  10. சுயஉதவி குழுவை ஊக்குவிக்க வேண்டும்.
  11. தொடக்க கல்வியை கட்டாயம் (ம) இலவசமாக வழங்க வேண்டும்
  12. அரசு சாரா நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டும்.

மக்கள்தொகை கோட்பாடுகள்:

மக்கள்தொகை வளர்ச்சிக் கட்டகோட்பாடு

  1. மால்தசின் மக்கள்தொகை கோட்பாடு
    1. உணவு உற்பத்தி அதிகரிக்கும் போது, மக்கள் தொகையும் அதிகரிக்கும்
    2. மக்கள்தொகை பெருக்க வீதத்திலும் உணவு உற்பத்தி கூட்டல் வீதத்திலும் அதிகரிக்கிறது.
    3. கிடைக்கும் உணவுப் பொருட்களின் அளவிற்கேற்ப, இயற்கைத் தடைகள் (ம) செயற்கைத்தடைகள் மூலம் மக்கள்தொகையை நிலைப்படுத்தலாம்

இயற்கைத் தடைகள்

  1. இவை இறப்பு வீதத்தை அதிகரித்து, மக்கள்தொகை வளர்ச்சியை பாதிக்கிறது.
  2. (எ.கா). வறுமை, வியாதிகள், போர்கள், பஞ்சங்கள்

செயற்கைத் தடைகள்

  1. மக்கள் தொகையை குறைக்க மனிதன் மேற்கொள்ளும் முயற்சிகள் செயற்கைத் தடைகள் எனப்படும்.
  2. (எ.கா): காலம் தாழ்த்திய திருமணம். வாழ்க்கையில் கட்டுப்பாட்டுடன் இருத்தல்

 

  1. உத்தம அளவுக் கோட்பாடு
  2. மக்கள்தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கும், அதன் விளைவாக தலா வருமானத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கும் இடையே உள்ளத் தொடர்பு விளக்குகிறது.
  3. இயற்கை வளங்கள், மூலதனப பொருட்களின் இருப்பு (ம) தொழில்நுட்ப நிலை ஆகியவற்றிற்கு ஏற்ற சிறந்த மக்கள் தொகை, உத்தம அளவு மக்கள் தொகையாகும்.
  4. தலா உற்பத்தி உச்சத்தில் இருக்கும் நிலையில் உள்ள மக்கட்தொகையே, உத்தம அளவு மக்கட் தொகையாகும்.
  5. உத்தம அளவை விட மக்கள்தொகை குறைவாக இருப்பின், அது குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடு.
  6. உத்தம அளவை விட மக்கள்தொகை அதிகமாக இருப்பின், அது அதிக மக்கள்தொகை கொண்ட நாடு.

iii. மக்கள்தொகை வளர்ச்சிக்கட்ட கோட்பாடு

  1. இக்கோட்பாடு பிறப்பு வீதத்திற்கும், இறப்பு வீதத்திற்கு உள்ள உறவை விளக்குகிறது.
  2. பிறப்பு வீதம் ஒரு வருடத்தில் 1000 நபர்களுக்கு எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்ற வீதம்
  3. இறப்பு வீதம் – ஒரு வருடத்தில் 1000 நபர்களில் எத்தனைபேர் இறக்கின்றனர் என்ற வீதம்
  4. சராசரி வாழ்நாள் – மக்கள் மொத்தமாக தங்களது சராசரி இறப்பை எட்டும் காலம்

2011 கணக்கெடுப்பின்படி – 65.96 ஆண்டுகள்

மக்கள்தொகை வளர்ச்சியின் நிலைகள்:

  1. முதல் நிலை
  2. உயர்ந்த பிறப்பு வீதமும். உயர்ந்த இறப்பு வீதமும்
  3. நாடு முன்னேற்றம் குறைந்து, பின்தங்கிய நிலையில் இருக்கும்.
  4. மக்களின் முக்கியத் தொழில் – வேளாண்மை
  5. மக்களின் வாழ்க்கைத்தரம் குறைந்து காணப்படும்.
  6. இந்த கட்டத்தில் அதிக பிறப்புவீதம், அதிக இறப்பு வீதத்தை சரிகட்டுவதால், மக்கள்தொகை வளர்ச்சி அதிகமாக இல்லை. தேக்கமுற்று காணப்படுகிறது.
  7. இரண்டாம் நிலை
  8. உயர்ந்த பிறப்பு வீதமும், குறைந்த இறப்பு வீதமும்
  9. நாடு முன்னேறும் போது, தொழில் நடவடிக்கைகள் அதிகரித்து, அதிக வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.
  10. நாட்டு வருமானம், தலா வருமானம் அதிகரித்து மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்கிறது
  11. உயர்ந்த அறிவியல் தொழில்நுட்ப வசதிகள் காரணமாக, போதிய மருத்துவ வசதிகள் கிடைக்கப் பெறுகின்றன.
  12. இக்கட்டத்தில் உயர்ந்த பிறப்பு வீதம், குறைந்த இறப்பு வீதத்திற்கு இடையே வேறுபாடு ஏற்படும்.
  13. மக்கள்தொகை வளர்ச்சி வீதம் அதிகமாகிறது

iii. மூன்றாம் நிலை

  1. குறைந்த பிறப்பு வீதமும், குறைந்த இறப்பு வீதமும்
  2. பொருளாதார முன்னேற்றம் காரணமாக சமுதாய அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது.
  3. மக்களின் மனப்பான்மை மாறுகிறது
  4. கல்வியறிவின் காரணமாக, சிறுகுடும்பமுறைக்கு மாறுவதால், பிறப்பு வீதம் குறைகிறது
  5. நல்ல சுகாதார வசதிகள் கிடைப்பதால், இறப்பு வீதம் குறைகிறது.
  6. பிறப்பு (ம) இறப்பு வீதங்கள் குறைவாக இருப்பதால், மக்கள்தொகை வளர்ச்சி நிலையாக இருக்கும்.
  7. உலக நாடுகள் அனைத்தும் மூன்று நிலைகளையும் கடக்க வேண்டும்.

மனித மேம்பாடு குறியீடு:

  1. இது வாழ்க்கை மட்டத்தின் ஒரு முழு அளவாகும்
  2. 1977 மனித வளர்ச்சி அறிக்கையின் படி, (மனித தெரிவுகளை விரிவாக்குவதிலும், மனித நலன்களை உயர்த்துவதும் மனித வளர்ச்சியின் மைய பொருளாகும்)
  3. முதல் மனித மேம்பாட்டு அறிக்கை 1990 ல் UNDP ஆல் பாகிஸ்தானின் முகஹப்-உல்-அக் என்ற பொருளியல் அறிஞரின் வழிகட்டுதலின்படி, வெளியிடப்பட்டது.

மனித தெரிவுகள்:

  1. நீண்ட கால நலவாழ்வு
  2. அறிவுத் திறனைபெற்றுக்கொள்ளுதல்
  3. நல்ல வாழ்க்கைத்தரம்

HDI- மதிப்பீடு:

  1. சுகாதாரத்தின் அடிப்படையில் நீண்டகால நலவாழ்வு 2011 கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 65.96 ஆண்டுகள்.
  2. ஆரம்பக்கல்வியில் சேரும் குழந்தைகள் (ம) 25 வயது, அதற்கும் மேற்பட்ட இளைஞர்களின் கல்விநிலையைக் கொண்டு மதிப்பிடுதல்

2011 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 74.04%.

HDI குறியீடு – 2019:

இந்தியவின் நிலை 129

மக்கள்தொகை கணக்கெடுப்பு:

ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு நாட்டிலுள்ள (அ) வரையறுக்கப்பட்ட ஒரு பகுதியிலுள்ள அனைத்து மக்களின் பொருளாதார, சமூக, மரபியல் தொடர்பான புள்ளி விவரங்களைத் திரட்டுதல்.

இந்தியாவில் மக்கள் தொகைக்கணக்கெடுப்பு:

  1. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களிடமிருந்து பதிவு செய்யப்படுகிறது.
  2. இந்தியாவில் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1871ல் எடுக்கப்பட்டது.
  3. 15வது கண்கெடுப்பு 2011ல் எடுக்கப்பட்டது.
  4. இதனை இந்தியாவின் பதிவுத்தலைவர் (ம) மக்கள் தொகை கணக்கு ஆணையர் மேற்கொள்வார்.
  5. இது மக்கள்தொகை கணக்குச்சட்டம் 1951ன் படி கணக்கிடப்படுகிறது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு

குறிக்கோள்: நமது மக்கள்தொகை கணக்கெடுப்பு நமது எதிர்காலம்

  1. மக்கள்தொகை – 121 கோடி
  2. மக்களடர்த்தி – 382 / 1 ச.கி.மீ
  3. பாலின விகிதம் – 940 / 1000
  4. குழந்தைகள் வளர்ச்சி விகிதம் – 17.64%
  5. பத்தாண்டுக்கான வளர்ச்சி விகிதம் -1.66%
  6. கல்வியறிவு 74.04%
  7. 1 மில்லியனுக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் – 50

பயன்கள்:

  1. மொத்த மக்கள் தொகை
  2. ஆண் பெண் வீதம்
  3. ஊரக – நகர்ப்புற மக்கள்தொகை
  4. வயது பாகுபாடு
  5. மக்கள்தொகை அடர்த்தி
  6. கல்வியறிவு நிலை
  7. நகரமயமாதல்
  8. தொழில்சார் வகைகள் போன்றவற்றை அறியமுடியும்

இந்திய மக்கள்தொகை வளர்ச்சிநிலைகள்:

மக்கள்தொகை வளர்ச்சி மாற்றம்

  1. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு நாட்டின் மக்கள்தொகை எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றம்
  2. இந்தியாவில் 1901ல் 238 மில்லியனாக இருந்த மக்கள்தொகை 2011ல் 1210 மில்லியனாக அதிகரித்துள்ளது.

பலவேறு நிலைகள்:

  1. தேக்கநிலை காலம் 1901 – 1921
  2. 20 ஆண்டுகளில் மக்கள் தொகை 15 மில்லியன்கள் அதிகரித்துள்ளது.
  3. 1921ல் மக்கள்தொகை எதிர் விகிதம் பதிவு – 0.31%
  4. 1921 பெரும்பிரிவினை ஆண்டு எனப்படுகிறது.
  5. நிலையான வளர்ச்சிகாலம் 1921 – 1951
  6. 30 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை 110 மில்லியன்கள் அதிகரித்துள்ளது.
  7. 1951 சிறு பிளவு ஆண்டு எனப்படுகிறது.

iii. நிலையான வளர்ச்சிக்காலம் : 1951 – 1981

  1. 30 ஆண்டுகளில் 361 மில்லியனிலிருந்து 683 மில்லியனாக வளர்ச்சி அடைந்துள்ளது.
  2. மக்கள்தொகை இரட்டிப்பாகியுள்ளது.
  3. இது அதிவேக வளர்ச்சி மக்கள்தொகை எனப்படுகிறது.
  4. அதிக வளர்ச்சியிலிருந்து வளர்ச்சிகுன்றல் தென்பட ஆரம்பித்த காலம் 1981 – 2011
  5. 2011ல் 1210 மில்லியனாக அதிகரித்தது.
  6. மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் ஒரு கணக்கெடுப்புக் காலத்திலிருந்து, மற்றொரு கணக்கெடுப்புக் காலத்திற்கு குறைந்துள்ளது.
  7. 2011ல் குழந்தைகள் வளர்ச்சி விகிதம் 17.64% ஆக உள்ளது.

தேசிய மக்கள்தொகை கொள்கை பற்றி எழுதுக:

தேசிய மக்கள்தொகைகொள்கை – 2000

  1. குறுகிய கால நோக்கம்
  2. தேவையான கருத்தடை சாதனங்கள் வழங்குதல்
  3. சுகாதார கட்டமைப்பு வசதிகள், சுகாதார பணியாளர்கள் (ம) ஒருங்கிணைக்கப்பட்ட பணிகள் மூலம் குழந்தை பராமரிப்பை மேம்படுத்துதல்
  4. நீண்டகால நோக்கம்
  5. 2045 ஆம் ஆண்டிற்குள் மக்கள்தொகையை நிலைப்படுத்துதல்
  6. மொத்த செழுமை காலத்தை 2010க்குள் மாற்றி அமைத்தல்

iii. மக்கள்தொகையை நிலைப்படுத்துவதற்கான முறைகள்

  1. குழந்தைகள் இறப்புவீதத்தை 1000 குழந்தைகளுக்கு 30 க்கு கீழ் குறைத்தல் IMR = 30/1000
  2. மகப்பேறு காலத்தில் இறக்கும் தாய்மார்கள் விதத்தை 1 லட்சம் குழந்தைகளுக்கு 100 க்கு கீழ் குறைத்தல் MMR = 100/100000
  3. 80% மகப்பேறானது, முறையான மருந்தகம் (ம) மருத்துவ நிறுவனங்கள், முறையான பயிற்சிஉடைய பணியாளர்கள் மூலம் நடைபெறச் செய்தல்
  4. உலக அளவில் நோய்தடுப்பு முறை
  5. காலந்தாழ்த்தி திருமணத்தை ஊக்குவித்தல்
  6. சிறப்பாகச் செயல்படும் ஊராட்சிகளுக்குப் பரிசளித்தல்
  7. கருத்தடை செய்து கொள்ளும் கணவன் (ம) மனைவிக்கு ரொக்கத்தொகை வழங்கி ஊக்குவித்தல்

தேசிய மக்கள்தொகை கொள்கை — 2002:

  1. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்
  2. அவர்களுடைய பொருள்சார் நலனை உயர்த்துதல்
  3. சமுதாயத்தில் மக்களை ஆக்கபூர்வமான சொத்துகளாகத் திகழச் செய்தல்

தேசிய மக்கள்தொகைகுழு:

  1. இது இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டது.
  2. தலைமை – பிரதமர்
  3. உறுப்பினர்கள் – அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள்
  4. இக்குழுவிற்கு கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு அதிகாரம் உள்ளது.
  5. இக்கொள்கையைச் செயல்படுத்துவதில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு முக்கியமாகும்.

மக்கள்தொகை கொள்கை:

மக்கள்தொகை கொள்கை என்பது மக்கள் தொகையின் அளவு, கட்டமைப்பு, இயல்புகளை முறைப்படுத்துவதற்கான முயற்சி ஆகும்.

சுவாமிநாதன்குழு:

  1. மக்கள்தொகை கொள்கையை வகுக்க அமைக்கப்பட்டது.
  2. 1994ல் இது தனது பரிந்துரைகளை அளித்தது

குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை செயல்படுத்துவதிலுள்ள சிரமங்கள்:

வறுமை:

  1. அதிகபட்ச இந்திய மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.
  2. இதனால் குடும்ப கட்டுப்பாடு செய்வதற்கான செலவினங்களை அவர்களால் கொடுக்க இயலவில்லை.
  3. வருமானத்திற்காக இவர்கள் அதிக குழந்தைகளை பெற்றெடுக்கின்றனர்.
  4. 2011 ன் படி இந்தியாவின் வறுமைநிலை 21.9%

எழுத்தறிவின்மை:

  1. இந்தியாவில் 26% பேர் கல்வியறிவற்றநிலையில் உள்ளனர்.
  2. கல்வியறிவின்மையால் குடும்பகட்டுப்பாடு திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர முடியவில்லை.
  3. சமய நம்பிக்கை

இறைவனின் வரம் என்று நினைத்து அதிக குழந்தைகளை பெற்று எழுக்கின்றனர்.

மதஎதிர்ப்பு:

குடும்ப கட்டுப்பாடு செய்வது மதத்திற்கு எதிரானது என்று அதனை செய்ய மறுக்கின்றனர்.

 

பணப்பற்றாக்குறை:

குடும்ப கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வை கொடுப்பதற்கு போதுமான பணவசதி இல்லை.

மலிவான (ம) பயனுள்ள வழிமுறைகள் இன்மை:

எளிய (ம) பயனுள்ள குடும்ப கட்டுப்பாடு செய்வதற்கு போதிய வழிமுறைகளை கண்டறிய ஆராய்ச்சி மையங்கள் இல்லை.

பயிற்சி பெற்ற ஊழியர்கள் பற்றாக்குறை:

  1. ஒவ்வொரு 10,000 மக்களுக்கு 2 மருத்துவர்களே உள்ளனர்.
  2. இதனால்தான் குடும்ப கட்டுப்பாட்டின் செயல்திறன் குறைந்துள்ளது.

குடும்ப கட்டுப்பாடு வழிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதற்கான காரணங்களாக பெண்கள் கூறுபவை:

  1. கர்பத்தடை வழிமுறைகளை பின்பற்ற தங்களது கணவர்கள் அனுமதி அளிப்பதில்லை.
  2. இரண்டு (அ) அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் வேண்டும் என விரும்புவது
  3. கர்ப்பத்தடையை (அ) கருத்தரித்தலை தடுக்கும் கருவிகளோ (அ) மாத்திரைகளோ தங்களது கிராமத்தில் பொதுமான அளவில் கிடைப்பதில்லை.
  4. கர்ப்பத்தடை வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து போதுமான தகவல்கள் தங்களுக்கு தெரியாமல் இருப்பது.
  5. ஆண்குழந்தைகள் வேண்டும் என்பதற்காக கருத்தரிப்பது (ஏற்கனவே பெண் குழந்தைகள் இருப்பினும்)
  6. கர்ப்பத்தடை கருவிகளையோ (அ) வேறு ஏதேனும் குடும்பக்கட்டுப்பாடு வழிமுறைகளையோ பின்பற்றி அவற்றை பயன்படுத்திய பிறகு வெளியே போடுவதற்கு வழி இல்லாமை.
  7. இதனை பின்பற்றும் எண்ணம் இல்லாமல் சிலர் இருக்கின்றனர்.
  8. பெண்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை (ம) குடும்ப பொருளாதாரத்திற்கு எதிரானவை.

குடும்பக்கட்டுப்பாடு குறித்த மனோபாவம்:

  1. படித்த பெண்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை.
  2. நமது கையில் எதுவுமில்லை என்ற எண்ணம் கொண்டிருந்த பழைய தலைமுறையினர்கூட, தற்போது மாறியுள்ளனர்.
  3. குழந்தை வளர்ப்பது சிரமம் என எண்ணுகின்றனர்.
  4. குடியிருப்பு (ம) உணவுப் பொருட்களின் பற்றாக்குறை குழந்தைபிறப்பின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.
  5. சமூக அந்தஸ்து கீழாக உள்ள மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுள்ளனர்.
  6. கிராமப்புற பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லை.
  7. நகர்ப்புற பெண்கள் குடும்ப கட்டுப்பாடு முறையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

குடும்ப கட்டுப்பாட்டுத்திட்டம்:

  1. 1950 ல் குடும்பகட்டுப்பாட்டு திட்டத்தை உருவாக்கிய முதல் நாடு – இந்தியா
  2. 1952 ல் செயல்படுத்தப்பட்டது
  3. 1977ல் குடும்பகட்டுப்பாடு என்பது நல்வாழ்வு எனமாற்றம்
  4. 1975 — 1977 இடையில் விதிக்கப்பட்ட குடும்பகட்டுப்பாட்டிற்கு பலத்த எதிர்ப்பு இருந்தது.

கட்டுப்பாட்டு முறைகள்:

  1. ஆணுறை பயன்பாடு
  2. கருத்தடை மாத்திரைகள்
  3. கருத்தடை அறுவை சிகிச்சை
  4. நிதி உதவி
  5. விழிப்புணர்வு

சுவாமி நாதன் குழு பரிந்துரைகள்:

நோக்கம்:

  1. தேசிய மக்கள்தொகை கொள்கையில் முழுமையான சுகாதார அணுகுமுறைகள் (ம) சில அடிப்படை மாற்றங்களை செயல்படுத்த ஆலோசனைகள்
  2. மக்கள்தொகை கொள்கையை வகுக்க 1994ல் அமைக்கப்பட்டது

பரிந்துரைகள்:

  1. 2010க்குள் மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்துதல்
  2. மிகவும் துரிதமான (ம) சிறந்த முறையில் குறைந்தபட்ச தேவைத்திட்டத்தை அமல்படுத்துதல்
  3. குடும்ப நலவாழ்வுதிட்டம் வெற்றிபெறுவதற்கு மாற்று அணுகுமுறைகளை பயன்படுத்துதல்
  4. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளில் அனைத்து நிறுவனங்களும் பங்குபெறுதல்
  5. இனப்பெருக்க விகிதத்தை குறைத்தல்
  6. கருத்தடை வழிமுறையை பின்பற்றுபவருக்கு வழங்கப்படும் சலுகைத் தொகைக்கு மாற்றாக, மக்கள்தொகை (ம) சமூக முன்னேற்ற நிதியை வழங்குதல்
  7. மாநில மக்கள்தொகை குழு (ம) சமூக முன்னேற்ற ஆணையத்தை உருவாக்குதல்
  8. குழுவில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த பிரமுகர், வல்லுநர், அரசுசாரா பிரதிநிதிகள் இடம்ட பெறுதல்
  9. மாநில, மாவட்ட, பஞ்சாயத்து, அளவில் மக்கள் தொகை (ம) சமூக முன்னேற்ற ஆணையத்தை அமைத்தல்.
  10. குடும்பத்தை திட்டமிடலில் பெண்கள் பங்குபெறுதல்

அடைய வேண்டிய இலக்குகள்:

  1. 18 வயதிற்குகீழ் திருமணம் நடைபெறுவதை தடுத்தல்
  2. பிரசவம் 100% பயிற்சி பெற்றவர்களை கொண்டு நடைபெறுதல்
  3. தாய் – செய் இறப்பு விகிதம் குறைத்தல்
  4. போலியோ, டிப்தீரியா, கக்குவான் இருமல், அம்மை போன்றவற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல்
  5. அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்கப் பெறுதல்
  6. எளிய முறையில் பெறக்கூடிய கருத்தடை சாதனங்களை கிடைக்கச் செய்தல்
  7. ஆரம்பக்கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்

விமர்சனங்கள்:

  1. அரசியல் சார்ந்த மக்கள்தொகைகுழு சிறப்பாக செயலாற்ற முடியாது.
  2. குறைந்தபட்ச தேவை திட்டத்திற்கும், மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை
  3. குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்ட வழிமுறைகளை மீறுபவர்களுக்கு ஊக்கத் தொகை அளித்தல் கூடாது என குறிப்பிடவில்லை.
  4. இதனை மீறுபவர்களுக்கு தண்டனைகள் குறிப்பிடப்படவில்லை.
  5. இத்திட்ட தோல்விக்கு அரசியல் பிரச்சனையே முக்கிய காரணம் என குறிப்பிடவில்லை.

மக்கள் தொகை கட்டுப்பாடும் ஐந்தாண்டுத் திட்டமும்:

முதல் (ம) இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம்:

  1. மக்கள்தொகை பற்றிய இந்திய அணுகுமுறை இயற்கையில் பிறப்புக்கு எதிராக இருந்தது
  2. அதாவது பிறப்பு விகிதத்தை குறைக்க முயன்றது
  3. அடிப்படை – மருத்துவமனை அணுகுமுறை திட்டம்

மூன்றாவது திட்டகாலம்:

சமுதாய விரிவாக்க அணுகுமுறையாக மாற்றப்பட்டது.

நான்காம் திட்டகாலம்:

  1. இம்முறையில் சிற்றுண்டிச்சாலை அணுகுமுறையிலிருந்து முகாம் அணுகுமுறைக்கு மாற்றப்பட்டது.
  2. கருத்தடை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முடிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
  3. இது நாடு முழுவதும் அமைக்கப்பட்ட ‘வாசெக்டமி’ முகாம்களில் நடைபெற்றது.

ஐந்தாம் திட்ட காலம்:

  1. 1976 ல் ஒரு தேசிய மக்கள்தொகை கொள்கை வகுப்பட்டது.
  2. கட்டாய கருத்தடை சட்டம் இயற்றுதல்
  3. மக்கள் ஆண்டு வளர்ச்சி வீதம் 1.4% ஆக மாற்றுதல்
  4. கருத்தடை செய்வோருக்கு ஊக்கமளித்தல்
  5. பெண்களின் திருமண வயது 18 ஆகவும். ஆண்களுக்கு 21 ஆகவும் உயர்த்துதல்
  6. முகாம் அணுகுமுறையில் இருந்து இலக்கு முறைக்கு மாற்றம் செய்தல்
  7. 1978ல் கட்டாய அணுகுமுறையை மாற்றி தாமே விரும்பி ஏற்கும் அணுகுமுறை பின்பற்றப்பட்டது.

ஆறாம் திட்ட காலம்:

  1. ஒருங்கிணைந்த குடும்ப நிலத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  2. இதில் தாய் – சேய் நலப்பணிகளும் அடக்கம்

 

Scroll to Top