17.அரசின் சுகாதாரக் கொள்கை
தேசிய சுகாதாரக் கொள்கை – 1983:
- சுகாதாரம் (ம) குடும்ப நல அமைச்சகத்தால், 1983 ல் இக்கொள்கை வெளியிடப்பட்டது.
- 2000 ஆம் ஆண்டிற்குள் எல்லோருக்கும் நல்வாழ்வு என்ற இலக்கை அடைவது இதன் குறிக்கோளாகும்.
- இதற்கான உத்திகள்: சுகாதார கட்டமைப்பு, சுகாதார மனித மேம்பாட்டு ஆராய்ச்சி, சுகாதார முன்னேற்றம்
- குடும்பக் கட்டுப்பாடு
தேசிய சுகாதாரக் கொள்கை – 2002:
- அனைவரையும் சுகாதார திட்டத்தின் கீழ் கொண்டு வருதல்
- பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் உடல்நலத்திற்கும் இடையே ஒரு இணைப்பை உருவாக்குவது
நோக்கங்கள்:
- அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலான சுகாதாரத்தை ஏற்படுத்துவது
- பரவலாக்கப்பட்ட சுகாதார அமைப்புகளை தொடர்பு கொள்ளும் வழிமுறைகளை அதிகப்படுத்துவது
- சுகாதார கட்டமைப்புகள் குறைவாக உள்ள இடத்தில் புதிதாக ஏற்படுத்துவது
- ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள இடங்களில் மேம்படுத்துவது பொது சுகாதார நிர்வாக திறனை வலுப்படுத்துவது
- அலோபதி மருத்துவ முறையில் மருந்துகளின் பயன்பாட்டை முறைப்படுத்துவது
- பொது சுகாதாரத்தில் தனியார் நிறுவனங்களை அதிகப்படுத்துவது (ம) முறைப்படுத்துவது
- பாரம்பரிய மருத்துவமுறைகளை அணுகுவதற்கான வழிமுறைகளை அதிகப்படுத்துவது
இலக்குகள்:
2005-க்குள்:
- போலியோ (ம) தொழுநோயை ஒழிப்பது
- ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு கண்காணிப்பு அமைப்பு, தேசிய சுகாதார கணக்கு (ம) புள்ளியியல் அமைப்பை ஏற்படுத்துவது
- மாநிலங்களால் சுகாதாரத்திற்கு செலவிடப்படும் நிதியை 5.5% லிருந்து 7% அளவிற்கு உயர்த்துவது
- சுகாதார வரவு – செலவு திட்ட நிதியில் 1% மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒதுக்குவது
2007 க்குள்:
HIV / எய்ட்ஸ் நோய் தொற்றை ஒழிப்பது
2010 க்குள்:
- கருங்காய்ச்சலை ஒழிப்பது
- TB, மலேரியா போன்ற நோய் பரப்பினை அழிப்பதன் மூலம், உயிரிழப்புகளை 50% குறைப்பது.
- பார்வை இழப்பு குறைபாட்டை 0.5% குறைத்தல்
- IMR = 30/1000, MMR = 100 / 100000 என குறைத்தல்
- பொது சுகாதார அமைப்புகளின் பயன்பாட்டை 20% லிருந்து 75% ஆக உயர்த்துவது
- மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பொது சுகாதாரத்திற்கு செலவிடப்படும் நிதியை 0.9% லிருந்து 2% ஆக உயர்த்துவது
- சுகாதாரத்திற்கு செலவிடப்படும் வரவு செலவு திட்ட நிதியில் 2% மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒதுக்குவது
- மொத்த சுகாதார செலவினத்தில் மத்திய அரசின் மானியத்தை 25% ஆக உயர்த்துவது
- மாநிலங்களால் சுகாதாரத்திற்கு செலவிடப்படும் நிதியை 8% ஆக உயர்த்துவது
2015 க்குள்:
யானைக்கால் நோயை ஒழிப்பது
தேசிய சுகாதாரக் கொள்கை – 2017:
நோக்கம்:
- 2002 க்கு பின்னர் ஏற்பட்ட சமூக, பொருளாதார, நோய் பரவியல் மாற்றங்கள் (ம) நவீன மருத்துவ சவால்களை எதிர்கொள்ளல்.
- சுகாதாரம், அமைப்புகள். சுகாதார கவனிப்பு சேவைகளில் முதலீடு.
- மனிதவள ஆதாரங்களை வளர்த்தல்.
- சிறந்த உடல் நலனுக்குத் தேவையான அறிவுத் தளத்தை உருவாக்குதல்
சிறப்பம்சங்கள்:
- நோய்க்கு நிவாரணம் என்பதற்குப் பதிலாக “முழுமையான ஆரோக்கியம்” என்பதை அடைதல்
- மொத்த GDP யில் 2.5% சுகாதாரத்திற்கு செலவிடல்
- இலவச மருந்துகள், அவசரகால சிகிக்சைகள் என அனைத்தையும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கச் செய்தல்
- பங்குநிதி ஆரம்ப சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும்.
- மருத்துவ படிப்புகளில் காலத்துக்கேற்ற சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும்.
- நோய்களின் தீவிரத்தை கண்காணித்தல்
- பல்வேறு சுகாதார சேவைகளுக்கான ஒருங்கிணைந்த கொள்கையாகும்.
- ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு, நீரிழிவு, ரத்த அழுத்தம் என பல சிகிச்சைகள் தரப்படும்.
- இரண்டாம்நிலை சுகாதார சேவை மாவட்ட அளவில் அளிக்கப்படும்.
- ஆரம்ப சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இலக்குகள்:
- 1000 பேருக்கு 2 படுக்கை அறை என மருத்துவ வசதி ஏற்படுத்துதல்
- 2025 க்குள் சராசரி வாழ்நாளை 67.5 லிருந்து 70 ஆக மாற்றுதல்
- 5 வயதிற்குட்பட்ட குழந்தை இறப்பு IMR = 23/1000 (2025 க்குள்)
- MMR = 100 / 1 லட்சம் (2025 க்குள்) என குறைத்தல்
- மொத்த கருவுறுதல் விகிதம், TFR = 2.1 / 1000 (2025 க்குள்)
- HIV பாதிக்கப்பட்ட 90% பேருக்கு 2020 க்குள் சிகிச்சை தருதல்
- 2025 க்குள் 30 சுகாதாரக் குறியீடுகளை அடைதல்
- 2020 க்குள் பொது நோய்க்கான பதிவேடுகளை உருவாக்குதல்
- இருதய, புற்றுநோய், நீரிழிவு, நுரையீரல் நோயினால் ஏற்படும் அகால மரணம் – 25% குறைத்தல்.