13.சமுதாய மேம்பாட்டு திட்டம்

சமூக மேம்பாட்டுத் திட்டம்:

  1. 1952, அக்டோபர் 2 – சமூக மேம்பாட்டுத் திட்டம்
  2. 1953, அக்டோபர் 2 – தேசிய வரிவாக்கத் திட்டம் துவங்கப்பட்டது.

நோக்கம்: கிராம மக்களின் வறுமை (ம) வேலைவாய்ப்பின்மையை ஒழித்தல்

இத்திட்டமானது எட்டவா கோரக்பூர் சோதனையின் அடிப்படையிலும் ஆல்பர்ட் மேயோ என்பவரின் விளக்கத்தினாலும் உருவானது.

குறிக்கோள்:

  1. கிராம மக்களிடையே வலுவான பொருளாதார நிலைகளை உருவாக்குதல்
  2. விவசாய உற்பத்தி, நீர்பாசன வசதிகளை உருவாக்குதல்
  3. பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், கிராம மக்களுக்கு நீர்மூலம் பரவும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு.
  4. போக்குவரத்து, தகவல் தொடர்பு வசதிகளை உருவாக்குதல்
  5. குடிசை (ம) குறுந்தொழில்களை கிராமங்களில் உருவாக்குதல்
  6. கிராமப்புற மக்களுக்கு முன்னேற்ற எண்ணத்தை உருவாக்கி, தன்னிறைவை ஏற்படுத்துதல்
  7. சமுதாய உணர்வு, ஒற்றுமையை வலியுறுத்தல்
  8. கல்வி முன்னேற்றம், பொது சுகாதாரம், சமுதாய கூடங்கள், விளையாட்டு (ம) கலாச்சார விழாக்களை ஏற்பாடு செய்தல்
  9. கிராமப்புற வேலையின்மை பிரச்சனையை தீர்த்தல்
  10. கிராமப்புற வீடுகள் மேம்பாடு
  11. மேம்பாட்டுத் திட்டங்களில் மக்களின் பங்கினை உணர்த்துதல்
  12. திட்டத்தை நடைமுறைப்படுத்தி, ஊரக வாழ்வில் பன்முனை வளர்ச்சியை எட்டுதல்

திட்ட செயலாக்கம்:

  1. 1952 ல் தேர்வு செய்யப்பட்ட ஒன்றியங்கள் – 55
  2. 1972 ல் ஒன்றியங்கள் – 5123
  3. 47 கோடி மக்கள் தொகையைக் கொண்ட 5 லட்சம் கிராமங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
  4. ஒன்றியத்தின் பரப்பளவு : 400 – 500 ச.கீ.மீ
  5. மக்கள் தொகையளவு : 1 லட்சம்

திட்ட செயல்பாட்டு அலுவலர்கள்:

  1. திட்ட அலுவலர்கள்
  2. ஒன்றிய (வட்டார) வளர்ச்சி அலுவலர்கள்
  3. தொழில்நுட்ப வல்லுநர்கள்
  4. கிராம நிர்வாக அலுவலர்கள்

திட்டத்தின் பண்புகள்:

  1. கிராமப்புற மக்களிடையே தன்னம்பிக்கையை வளர்ப்பது
  2. கிராமப்புற மக்களின் உளவியல் கண்ணோட்டத்தினை மாற்றுவது
  3. புதிய நிர்வாக அமைப்பினை உருவாக்குவது
  4. மக்கள் நலன்சார்ந்த திட்டம் உருவாக்குவது
  5. பஞ்சாயத்து அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள் ஒன்றிணைந்து சமுதாய அக்கறைக்காக செயல்படும் என்ற எண்ணத்தை உருவாக்குவது

சமுதாய மேம்பாட்டுத் திட்டம் மதிப்பீடு / தோல்விக்கான காரணங்கள்:

தோல்விக்கான காரணங்கள்:

  1. ஊரக வளர்ச்சித்திட்டம் நன்கு திட்டமிடப்படவில்லை.
  2. மக்களின் தேவைகளை அடையாளம் காணத் தவறிவிட்டது.
  3. அரசு களப்பணியாளர்களுக்கு சிறந்த பயிற்சி ஏற்படுத்திதரவில்லை.
  4. இத்திட்டத்தில் முன்னுரிமைகள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
  5. இத்திட்டம் அதிகாரமயமாக்கப்பட்டதால் மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
  6. திட்டத்தை செயல்படுத்தும் அரசுகளப்பணியாளர்களிடையே போதியளவு பொறுப்பின்மை
  7. ஊரக வளர்ச்சி திட்டப்பணியாளர்களின் மதிப்பை பெறத்தவறிவிட்டது.
  8. நிர்வாக குறைபாடு, ஊழல் இதனால் திட்டம் தோல்வி அடைந்தது.
  9. இத்திட்டத்தின் பயன் பணக்கார பெரிய விவசாயிகளை சென்றடைந்தது.
  10. வளர்ச்சித்துறைகளிடையே காணப்பட்ட மோசமான ஒருங்கிணைப்பு
  11. எதிர்பார்த்த அளவில் விவசாய வளர்ச்சியும், உணவு உற்பத்தியும் ஏற்படவில்லை. (பல்வந்த்ராய் குழு அமைப்பு)

சமூக மேம்பாட்டுத்திட்டம் மதிப்பீடு:

  1. இத்திட்டம் ஆரம்பத்தில் சில வெற்றிகளைத் தந்தது
  2. ஆனால் படிப்படியாக தன் முக்கியத்துவத்தை இழந்தது
  3. இத்திட்டம் மக்களின் பங்களிப்பை பெறத் தவறிவிட்டது.
  4. இது பின்னலில் 1978 – 79ல் ஒருங்கிணைந்த ஊரக மேம்பாட்டுத் திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டது.
  5. இதன் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

 

 

Scroll to Top